செய்திகள் :

Doctor Vikatan: பிரசவ தேதியைத் தாண்டியும் குழந்தை பிறக்காவிட்டால் காத்திருக்கலாமா?

post image

Doctor Vikatan: கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பிரசவ தேதியைக் குறித்துக்கொடுக்கிறார்கள். சில பெண்களுக்கு அந்தத் தேதியில் பிரசவம் நடப்பதில்லை. அதைத் தாண்டிப் போவதும் நடக்கிறது. மருத்துவர்கள் குறித்துக்கொடுத்த  தேதியில் பிரசவம் நடக்கவில்லை என்றால் அதற்காகக் காத்திருப்பதில் என்ன பிரச்னை...  அப்படி எத்தனை நாள்கள் காத்திருக்கலாம்? 

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி  

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

பிரசவ தேதியைத் துல்லியமாகக் கணிக்க வேண்டுமென்றால் கர்ப்பம் உறுதியான காலகட்டமும் சரியாக கணிக்கப்பட வேண்டும். மாதவிலக்கு சுழற்சி முறையாக இருக்கும் பட்சத்தில், கடைசி மாதவிலக்கான நாளின் அடிப்படையில் பிரசவ தேதியைக் கணக்கிடலாம்.   ஒருவேளை முறைதவறிய மாதவிலக்கு சுழற்சி கொண்டவர்கள் என்றால், முதல் 3 மாத கர்ப்பதில் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் அடிப்படையில் பிரசவ தேதியை கணிக்கலாம்.  8 முதல் 12 வாரங்களில் செய்யப்படும் ஸ்கேனை 'டேட்டிங் ஸ்கேன்' (Dating scan) என்று சொல்வோம்.

37 வாரங்கள் முடிவடைந்த நிலையில் அதை நிறைமாத கர்ப்பம் என்று சொல்வோம். கர்ப்பிணிகள் பொதுவாக 37 முதல் 40 வாரங்களில் குழந்தை பெற்றாக வேண்டும். பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு 37 முதல் 40 வாரங்களில் பிரசவம் நிகழ்ந்துவிடும். அவர்களில் 5 சதவிகிதம் பேருக்கு இப்படி பிரசவ தேதியைத் தாண்டியும் பிரசவம் ஆகாமலிருக்கலாம். 40 வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில் குழந்தைக்கும் தாய்க்கும் சில சிக்கல்கள் ஏறட்படலாம்.

குழந்தை தொடர்ந்து பெரிதாக வளர்ந்துகொண்டே போகும். குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம்.

அதன்படி, குழந்தைக்கு....

குழந்தை தொடர்ந்து பெரிதாக வளர்ந்துகொண்டே போகும். குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம். குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் குறைந்து பிரச்னைகளை ஏற்படுத்தலாம். குழந்தை தாயின் வயிற்றிலேயே மலம் கழிக்கலாம். அரிதாக சில குழந்தைகள் தாயின் கர்ப்பப்பைக்குள்ளேயே இறந்தும் போகலாம்.

அம்மாவுக்கு....
பெரிய குழந்தையைப் பிரசவிக்கும் முயற்சியில் தாயின் வெஜைனா மற்றும் வெஜைனாவுக்கும் ஆசனவாய்க்கும் இடையிலான பகுதிகளில்  காயங்கள் ஏற்படலாம். சிசேரியனுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

பிரசவ தேதி கடந்துவிட்ட நிலையில், குழந்தையின் நிலையைக் கண்காணிக்க, 'பயோபிசிகல் புரொஃபைல்' எனும் ஸ்கேன் செய்யப்படும்.
40 வாரங்களில் கர்ப்பிணியின் இடுப்பெலும்புப் பகுதியை சோதனை செய்து பார்த்து, கர்ப்பப்பையின் வாயானது பிரசவிக்க ஏற்றதாக இருக்கிறதா என்று பார்ப்போம். சில மருத்துவர்கள் பிரசவ வலி வருவதற்காக 41 வாரங்கள்கூட காத்திருப்பதுண்டு. கர்ப்பப்பை வாய் பிரசவிக்கத் தயார்நிலையில் இருப்பது தெரிந்தால் செயற்கையாக பிரசவ வலியைத் தூண்ட கர்ப்பிணிக்கு மருந்துகள் கொடுப்போம்.

குழந்தை மிகவும் பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பை வாய் சாதகமாக இல்லாமலிருந்தாலோ, தாய் மற்றும் குழந்தையின் நலன் கருதி, சிசேரியன் செய்ய முடிவெடுப்போம்.

கர்ப்பப்பை வாயானது சாதகமாக இல்லாத நிலையில் NST ( non stress test), AFI (Amniotic fluid index), BPP (biophysical profile) போன்ற டெஸ்ட்டுகளின் மூலம் குழந்தையைக் கண்காணிப்போம். இந்த டெஸ்ட் எல்லாம் நார்மல் என்ற நிலையிலோ, கர்ப்பிணிக்கு வலி வரும் பட்சத்திலோ உடனடியாக டெலிவரி பார்ப்போம். ஒருவேளை குழந்தை மிகவும் பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பை வாய் சாதகமாக இல்லாமலிருந்தாலோ, தாய் மற்றும் குழந்தையின் நலன் கருதி, சிசேரியன் செய்ய முடிவெடுப்போம். எனவே, மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதியில் பிரசவம் நிகழவில்லை என்றால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சைகள்... கூந்தலை வளர்க்குமா, பாதிக்குமா?

Doctor Vikatan: முடி வளர்ச்சி குறைவாக உள்ள பலரும் இன்று ஹேர் எக்ஸ்டென்ஷன் எனப்படும் சிகிச்சையைச் செய்துகொள்வதைப் பார்க்கிறோம். அந்தச் சிகிச்சையைச் செய்துகொண்டால், முடி வளர்ச்சி அதிகரிக்குமா.... ஹேர் எ... மேலும் பார்க்க

பழைய சோறு கஞ்சியில் இத்தனை நன்மைகளா? - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆய்வும் மருத்துவர் விளக்கமும்!

வடித்த சாதம் வீணாவதைத் தடுக்க நம் முன்னோர்கள் மீதி இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கஞ்சி போல குடிக்கும் பாரம்பரியப் பழக்கத்தை வைத்திருந்தனர்.தமிழர்களின் பார... மேலும் பார்க்க

Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக் கூடாது என்று சொல்லப்படுவது உண்மையா?!

Doctor Vikatan: யாருக்காவது சளி பிடித்திருந்தால் பால் குடிக்கக் கூடாது என்று சொல்வதைக் கேட்கிறோம். பால் குடித்தால் சளித்தொந்தரவு அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை...?பதில்சொல்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: சராசரிக்கு முன்பே பூப்படைவது, வயதைத் தாண்டியும் தள்ளிப்போவது; இயற்கை தீர்வு உண்டா?

Doctor Vikatan: இந்தக் காலத்துப் பெண் குழந்தைகளில்சிலர் சராசரி வயதுக்கு முன்பே பூப்படைகிறார்கள். இன்னும் சிலரோ, சராசரி வயதைக் கடந்தும் பூப்பெய்தாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆங்கிலமருந்துகள், ஹார்ம... மேலும் பார்க்க

Doctor Vikatan: பெயின் கில்லர் இல்லாமல் பீரியட்ஸ் வலியை சமாளிக்க முடியாதா?

Doctor Vikatan: என்வயது 24.பீரியட்ஸ் நாள்களில் எனக்குக் கடுமையான வயிற்றுவலி, இடுப்புவலி, முதுகுவலி ஏற்படுகிறது.ஒவ்வொரு மாதமும் பெயின்கில்லர்மாத்திரைகள் போட்டுக்கொண்டுதான் சமாளிக்கிறேன். பெயின்கில்லர் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நரக வேதனையைத் தரும் வறட்டு இருமல்,தொண்டைப்புண்... இருமலை நிறுத்த வழி உண்டா?

Doctor Vikatan: என் வயது 55. எனக்கு கடந்த ஒரு மாதமாக கடுமையான வறட்டு இருமல் இருக்கிறது. பாட்டில், பாட்டிலாக இருமல் மருந்து குடித்தும் இருமல் நிற்கவில்லை. இருமி இருமி, தொண்டை புண்ணானதுதான்மிச்சம். இரும... மேலும் பார்க்க