செய்திகள் :

Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்ட்... ரிசல்ட் சரியாக இருக்குமா?!

post image

Doctor Vikatan: குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரைநோய்க்கான பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறோம். முந்தைய நாள் இரவும் சர்க்கரைநோய்க்கான மாத்திரைகள் போட்டுக்கொண்டு, மறுநாள் காலையும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டுதான் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார் மருத்துவர். மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் டெஸ்ட் எப்படிச் சரியாக  இருக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

நீங்கள் ஏற்கெனவே சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர் என்றால், உங்கள் உடலுக்கு அந்த மாத்திரை எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்பதே இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கம். மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு டெஸ்ட் செய்தால்தான்,  நீங்கள் சாப்பிடும் மருந்து, உங்கள் ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் (Control) வைத்திருக்கிறதா அல்லது மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்பதைக் கணிக்க முடியும்.

சர்க்கரைநோய் என்பது ஒரு நாள் மட்டும் வரும் பிரச்னை அல்ல. மாத்திரையை ஒரு நாள் நிறுத்தினாலும் உடலில் சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும். நீங்கள் தினமும் மாத்திரை போடுபவர் என்பதால், அந்த மாத்திரையின் தாக்கத்தோடு உங்கள் உடல் எப்படி இயங்குகிறது என்பதை அறிவதே சரியான டெஸ்ட் ரிசல்ட்டாக இருக்கும். முந்தைய நாள் இரவு மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சர்க்கரை (Fasting) அளவு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம். காலை உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கும் டெஸ்ட்டிற்கும், காலை மாத்திரை மிக அவசியம். அப்போதுதான் உணவு உண்ட பின் சர்க்கரை எவ்வளவு உயர்கிறது என்பதையும் மருந்து அதைக் கட்டுப்படுத்துகிறதா என்பதையும் பார்க்க முடியும்.

மாத்திரையை ஒரு நாள் நிறுத்தினாலும் உடலில் சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.

மாத்திரை போடாமல் டெஸ்ட் எடுத்து, சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டினால், மருத்துவர் உங்களுக்குத் தேவையில்லாமல்  கூடுதல் மாத்திரைகளையோ அல்லது இன்சுலினையோ பரிந்துரைக்க நேரிடும். இது உண்மையில் தவறான சிகிச்சைக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று சந்தேகம் வந்து, முதல்முறை டெஸ்ட் எடுக்கும்போதும், குறிப்பிட்ட காரணங்களுக்காக மாத்திரை போடாமல்  டெஸ்ட் எடுத்துப் பாருங்கள் என உங்கள் மருத்துவர் பிரத்யேகமாகச் சொல்லியிருந்தாலும் மட்டுமே  மாத்திரைகள் போடாமல் டெஸ்ட் செய்ய வேண்டும். மற்றபடி, சர்க்கரைநோய்க்கு வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு டெஸ்ட் செய்வதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: அடிக்கடி செல்லப் பிராணிகளிடம் கடி; எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் 2 நாய்க்குட்டிகளும், 3 பூனைகளும் வளர்க்கிறோம். என் மகனுக்கு 20 வயதாகிறது. அவற்றுடன் விளையாடும்போது வாரா வாரம் அவற்றின் நகங்களால் கீறுகின்றன. சில நேரங்களில் பற்களும் படு... மேலும் பார்க்க

பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா... பல் தேய்ங்க பாஸ்! - ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெர்ட்டும்

வாய் சுகாதாரமின்மைக்கும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகச் சொல்கிறது 'கேர்க்வெஸ்ட் இன்ஸ்டிட்யூட்'டின் சமீபத்திய ஆய்வு ஒன்று. அதன்படி 2040-ல், அமெரிக்காவில் மறதி நோயால் பாத... மேலும் பார்க்க

Doctor Vikatan: உயரம் குறைவான குழந்தை... உணவுகளின் மூலம் தீர்வு கிடைக்குமா?

Doctor Vikatan: என் 8 வயதுப் பெண் குழந்தை, அந்த வயதுக்குண்டான உயரத்தில் இல்லை. இது இப்படியே தொடருமோ என பயமாக இருக்கிறது. குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க பிரத்யேக உணவுகள் ஏதேனும் இருந்தால் பரிந்துரைக்க ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சருமத்தில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள்: ஆபத்தானவையா? அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு வயது 42.உடலின் சில பகுதிகளில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் மச்சங்கள் வருகின்றன. இப்படி உடலில் திடீரெனத் தோன்றும் சிவப்பு நிற மச்சங்கள்ஆபத்தானவையா... இவற்றை அகற்ற வேண்டியது அவசியம... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேகமாக எடையைக் குறைய உதவுமா Intermittent Fasting... எவ்வளவு இடைவெளி சரியானது?

Doctor Vikatan: என்னுடைய உறவினர் கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் எடையைக் குறைத்திருக்கிறார். இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting) இருப்பதாகவும் அதனால்தான் வேகமாக எடை குறைய முடிந்ததாகவும... மேலும் பார்க்க

நீலகிரி: விபத்தில் மூளைச் சாவடைந்த 22 வயது இளைஞர்; உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி டேம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் – விஜயகுமாரி. இந்தத் தம்பதிக்கு மோனிஷாஎன்கிற மகளும், மோனிக்ராஜ் என்ற மகனும் இருந்தனர். 22 வயதான மோனிக்ராஜ் விவச... மேலும் பார்க்க