செய்திகள் :

Form 16-ன் பெயர் மட்டுமல்ல; அதன் 'நடைமுறையும்' மாறுகிறது - என்ன அது?

post image

ஒவ்வொரு ஜூன் மாதமும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சம்பளதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இமெயில்களில் ஃபார்ம் 16 எட்டிப்பார்க்கும்.

இந்த ஃபார்ம் 16 வருவதற்குப் பின்னால், பெரிய நடைமுறை உள்ளது.

அதாவது ஒவ்வொரு காலாண்டிற்கும் சம்பளதாரர்கள் பெற்ற சம்பளத்தை ஃபார்ம் 24Q-ல் நிறுவனங்கள் அப்டேட் செய்யும். அதை பொறுத்தே ஃபார்ம் 16 கொடுக்கப்படும்.

புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஃபார்ம் 16 ஃபார்ம் 130 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

அதே போல, இப்போது இந்த ஃபார்ம் 24Q - ஃபார்ம் 138 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல்
வருமான வரிக் கணக்கு தாக்கல்

அடுத்ததாக, நிறுவனத்தில் பணிபுரியும் சம்பளம் வாங்காதவர்களுடைய தகவல்கள் 26Q-ல் அப்டேட் செய்யப்படும். இப்போது ஃபார்ம் 26Q ஃபார்ம் 140 ஆக மாற்றப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஃபார்ம்களில் மேனுவலாக எந்தத் தகவல்களையும் நிரப்பத் தேவையில்லை. அவற்றில் ஏற்கெனவே நிரப்பப்பட்டிருக்கும்.

முக்கியமாக, வரி, கூடுதல் கட்டணம், செஸ் ஆகியவை ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதனால், நேர விரயம் தடுக்கப்படும்... தவறுகளும் குறைக்கப்படும்.

இதில் உங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா?

நிறுவனங்களின் இந்த நடைமுறைகள் எளிதாகும் போது, நமக்குமே வருமான வரிக் கணக்குத் தாக்கலில் வேலை குறையும்... நடைமுறையும் எளிதாகும்.

20 பேர் பலியான சத்தீஸ்கர் ஆலை விபத்து: வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ்... மேலும் பார்க்க

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' - பகீர் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தீபக் சோனி. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரைசெனில் நடைபெற்ற ஒரு விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்... மேலும் பார்க்க

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி. இந்த நிலைமையெல்லாம் இப்போது... மேலும் பார்க்க

'திருப்பரங்குன்றத்தைத் தவிர வேறு பிரச்னையே இல்லையா?' - தீப விவகாரத்தில் காட்டமான நீதிபதிகள்

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், `திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே ச... மேலும் பார்க்க

`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' - நெகிழ்ந்த தங்கம் தென்னரசு

``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான்" - தந்தை தங்கப்பாண்டியன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆலமர மேடையில் தனயன் தங்கம் தென்னரசு உணர்ச்சி பூர்வமான பிரசா... மேலும் பார்க்க

'முதல்வர் கொடுத்த ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்தேன்...' - அதிர்ச்சியூட்டிய திருமாவளவன்

'தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்' என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை... மேலும் பார்க்க