செய்திகள் :

"G7 நாடுகள் இனி உலகை ஆள முடியாது" - சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து கனடா பிரதமர்

post image

உக்ரைன் விவகாரம், அமெரிக்கா-ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்க G7 அமைப்பு நாட்டின் தலைவர்கள் பிரான்சில் கூடியுள்ளனர்.

இந்த அமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் சனாயே தகாச்சி, பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

G7 அமைப்பு - பிரான்ஸ் மாநாடு - 2026
G7 அமைப்பு - பிரான்ஸ் மாநாடு - 2026

இவர்களுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விடுத்த சிறப்பழைப்பை ஏற்று, G7 அல்லாத நாடுகளின் தலைவர்களான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மற்றும் கென்ய அதிபர் வில்லியம் ருட்டோ ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ஐரோப்பாவிற்கு ஆறு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ``முன்பொரு காலத்தில் உலகை G7 நாடுகள் வழிநடத்தியதாகக் கருதப்பட்டிருந்தாலும், இனி அது சாத்தியமில்லை. தாங்கள் மட்டுமே உலகை ஆள்வதாக இனி அந்த நாடுகள் பாசாங்கு கூட செய்ய முடியாமல் தற்போதைய சூழல் உணர்த்தியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள பரந்த அளவிலான சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதை இந்தியா போன்ற நாடுகளின் பங்கேற்பு உணர்த்துகிறது.

பிரதமர் மோடி - கனடா பிரதமர் மார்க் கார்னி
பிரதமர் மோடி - கனடா பிரதமர் மார்க் கார்னி

தற்போது நடைபெறும் இந்த மாநாட்டில் G7 உறுப்பு நாடுகள் மட்டுமின்றி இந்தியா, பிரேசில், எகிப்து, கென்யா மற்றும் பல வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நட்பு நாடுகளும் பங்கேற்கின்றனர். உலகளாவிய பிரச்னைகளுக்கான தீர்வுகளில் இந்த நாடுகள் தங்களின் பரந்த தொலைநோக்குப் பார்வையையும், வலுவான பங்களிப்பையும் வழங்கும்.

இந்த மாநாடு ஒரு புதிய உலக ஒழுங்கமைப்பிற்குப் புத்துயிர் ஊட்ட உதவும். உலகப் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில் நடுத்தர நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் நான் பேசியிருந்தேன்" என்றார்.

102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் உடல்; கதறித் துடித்த பெற்றோர்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரஜேஷ்கண்ணன் - ஆனந்தி தம்பதியினரின் மகன் ஆகாஷ் டெலிசன் (26), குற்றவழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்குச் சென்றார்.அதையடுத்து ஆகாஷ் டெலிச... மேலும் பார்க்க

"தயவுசெய்து உங்களைப் பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள்"- தவெக குறித்து மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமியின் மகன் திருமணத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, திமுக எம்எல்ஏ ஓபிஎஸ் உள்ள... மேலும் பார்க்க

கோவை: மாமன்றத்திற்குள் போலீஸை அழைத்த மேயர்; உள்ளே வராத காவல்துறை! - பரபரத்த மாநகராட்சி கூட்டம்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கோவை மாநகராட்சியின் முதல் மாதாந்திர கூட்டம் இன்று மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கோவை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்கள், முதல்வர் விஜய் படத்துட... மேலும் பார்க்க

தவெக-வில் அதிமுக MLA: ``கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையா?" - தவெக-விற்கு அப்பாவு கேள்வி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைக்காத த.வெ.க, ஆட்சி அமைக்க தி.மு.க கூட்டணியில் தேர்தலை எதிர்க்கொண்ட கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு வழங்கின. அதேநேர... மேலும் பார்க்க

'அமைச்சர் பதவிகள் சரிதான்; ஆனால், துறை?' - முதல்வர் ரங்கசாமியின் `நோ போர்ட்ஃபோலியோ’ பாலிசி தொடருமா?

புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பா.ஜ.க 4 தொகுதியிலும், அ.தி.மு.க மற்றும் ஜோஸ் சார்லஸ் மார... மேலும் பார்க்க

'எல்லாருக்காகவும் திறந்திருக்கும் கதவு!' - தலைமைச் செயலகத்தில் கவனம் ஈர்க்கும் அமைச்சர் வன்னிஅரசு!

தலைமைச் செயலகத்தில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் அறை, ஒரு அமைச்சரின் அறைக்குரிய நடைமுறைகளை கடந்து விளிம்பு நிலை மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதாக ஒரு பேச்சு கோட்டை வட்டாரத்தில் அடிபட த... மேலும் பார்க்க