செய்திகள் :

Ilaiyaraaja: `137 படப் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை' - இளையராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

post image

இசைஞானி இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களை அவர் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பிரபல இசை நிறுவனமான 'சரிகம' (Saregama) இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததிருந்தது. அந்த வழக்கில், ``1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான 134 திரைப்படங்களின் இசை உரிமைகளை, அந்தந்த தயாரிப்பாளர்களிடம் இருந்து சரிகம நிறுவனம் தங்களுக்குரிய பிரத்யேக உரிமமாகப் பெற்றுள்ளது.

இளையராஜா
இளையராஜா

ஆனால், கடந்த ஜனவரி மாதம் இளையராஜா தரப்பில் அனுப்பப்பட்ட சட்டப்பூர்வ அறிவிப்பில், இந்தப் பாடல்கள் மீதான முழு உரிமையும் அவருக்கே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரித்து உரிய நீதி பெற்றுத்தரவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி துஷார் ராவ் கெடெலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரிகம நிறுவனம், ``இளையராஜா தனது பாடல்களை அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் (iTunes) மற்றும் ஜியோசாவ்ன் (JioSaavn) போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றிப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.

1957-ம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட இசையில், ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படாவிட்டால், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் ஆவார். அதன் அடிப்படையில், தயாரிப்பாளர்களிடம் இருந்து தாங்கள் முறைப்படி உரிமங்களைப் பெற்றிருக்கிறோம். எனவே, இளையராஜாவின் அனுமதி, எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உலகளாவிய மற்றும் நிரந்தர பதிப்புரிமை ஒப்பந்தத்தை மீறும் செயல்" எனக் குற்றம் சாட்டியது.

டெல்லி உயர் நீதிமன்றம்

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி துஷார் ராவ் கெடெலா, ``இளையராஜா சரிகம நிறுவனம் குறிப்பிடும் பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பது சரேகாமா நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த 134 படங்களில் இடம்பெற்றுள்ள இசை மற்றும் பாடல்களைப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கவோ இளையராஜாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது." என உத்தரவிட்டார்.

ஏற்கனவே 'மூடுபனி' படத்தின் "என் இனிய பொன் நிலவே" பாடல் தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் சரிகம நிறுவனத்துக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மிலான் குளிர்கால ஒலிம்பிக்: 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலி; ஒலிம்பிக் கமிட்டி சொன்ன பதில் என்ன?

இத்தாலியின் மிலான்-கோர்டினா (Milan-Cortina) பகுதியில் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்காகப் பிரமாண்ட உடற்பயிற்சிக் கூடம், டேபிள் ஃபுட்பால், ஏர் ஹ... மேலும் பார்க்க

SIR: ``கண் தெரியாத அம்மாவுடன் பல நாள்களாக அலைகிறேன்" - பாமர நபரின் ஆதங்கம் | வைரலாகும் வீடியோ

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் ... மேலும் பார்க்க

சிறுமிகளை விரட்டிவிட்டு கங்கைக்குப் பால் அபிஷேகம்; வைரலான வீடியோவும்... எழுந்த விவாதங்களும்!

இந்துகளின் புனித நதிகளில் ஒன்று கங்கை கங்கையில் நீராடினால், செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. கங்கையில் நீராடியவர்களின் ஏழு தலைமுறைகளை பாவம் அணுகாது என்றும் சொல்வதுண்டு. கங்கை ந... மேலும் பார்க்க

துலாபாரத்தில் நாய்: நடிகையின் செயலால் வைரலான வீடியோ; பக்தர்கள் கண்டனம் - நடிகையின் விளக்கம் என்ன?

தெலுங்கில் சமீபத்தில் வெளியான 'தி கிரேட் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷோ' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டினா ஸ்ராவ்யா. இவர் கடந்த புதன்கிழமை தெலங்கானா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பழங்குடியின தெய்வங்க... மேலும் பார்க்க

Zomato: பதவி விலகிய சொமோட்டோ நிறுவனர்; டெலிவரி ஊழியர்களின் போராட்டம்தான் காரணமா? - பின்னணி என்ன?

சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான 'எடர்னல்' (Eternal)-ன் நிறுவனராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர் தீபிந்தர் கோயல். இந்த மாத தொடக்கத்தில், பல்லாயிரக்கணக்கான டெல... மேலும் பார்க்க