செய்திகள் :

India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' - பாதுகாப்புத்துறை சொல்வதென்ன?

post image

மூன்றாவது நாளாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக இருக்கிறது.

தற்போது, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து கூறியிருப்பதாவது...

"இந்தியா - பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே உள்ள 26 இடங்களில் டிரோன்கள் தென்பட்டுள்ளன. இவை ஆயுதம் தாங்கிய டிரோன்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த 26 இடங்களில் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோடா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், புஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்கள் அடங்கும்.

எல்லையில் இந்திய ராணுவம்
எல்லையில் இந்திய ராணுவம்

இந்திய ராணுவம் மிகுந்த கவனத்தோடு...!

துரதிர்ஷ்டவசமாக, ஆயுதம் தாங்கிய டிரோன் ஒன்று, ஃபெரோஸ்பூரில் உள்ள மக்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், உள்ளூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் மிகுந்த கவனத்தோடு, ஆன்டி-டிரோன் இயந்திரம் மூலம் இந்த மாதிரியான வான்வழி தாக்குதல்களை டிராக் செய்து வருகிறது. நிலைமை உன்னிப்பாகவும் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என்றும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பீதி அடையத் தேவையில்லை என்றாலும், விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் அவசியம்." எனத் தெரிவித்துள்ளது.

India - Pakistan:``தேசத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்"- Ceasefire குறித்து இந்திய ராணுவம்!

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க

India - Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' - அறிவித்த இந்தியா... முடிவுக்கு வரும் மோதல்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து... மேலும் பார்க்க

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ... மேலும் பார்க்க

`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றா... மேலும் பார்க்க

"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" - ஓவைசி சொல்வது என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்தது. இதற்கு எதிர்வி... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுதங்கள் குறித்த கேள்வி; பாகிஸ்தான் அமைச்சரின் பதில் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையில், 'அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா?' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், "நான் உலகிற்குச் சொல்லிக... மேலும் பார்க்க