செய்திகள் :

Iran: "கத்தார், சவுதி, அமீரகம் கேட்டுகொண்டதால் தற்காலிக போர் நிறுத்தம்; ஆனால்..."- ட்ரம்ப் அறிவிப்பு

post image

"ஈரானுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு வேகமாகச் செயல்படுவது அவர்களுக்கு நல்லது.

இல்லையென்றால் அவர்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். நேரம் மிக மிக முக்கியமானது!" என்று நேற்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்நிலையில், இன்று தற்போது ஈரான் மீதான போரைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகப் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

ஈரான் போர்
ஈரான் போர்

அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது...

"கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானி, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோர், ஈரான் இஸ்லாமியக் குடியரசு மீது நாளை நடத்தத் திட்டமிட்டிருந்த ராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சிறந்த தலைவர்களும் எங்களது கூட்டாளிகளுமான அவர்களின் கருத்துப்படி—அமெரிக்காவிற்கும், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் பிற உலக நாடுகளுக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

முக்கியமாக, இந்த உடன்படிக்கையின்படி 'ஈரானிடம் அணு ஆயுதங்கள் எதுவும் இருக்காது!'

மேற்கூறிய தலைவர்கள் மீது நான் வைத்துள்ள மரியாதையின் அடிப்படையில், நாளை ஈரானின் மீது நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தும்படி பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத், கூட்டுப் படைத்தளபதிகளின் தலைவர் ஜெனரல் டேனியல் கெய்ன் மற்றும் அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதே சமயம், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படாத பட்சத்தில், உத்தரவு கிடைத்த அடுத்த கணமே ஈரான் மீது முழு அளவிலான மிகப்பெரிய தாக்குதலைத் தொடுக்கத் தயாராக இருக்குமாறும் அவர்களுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளேன்"

"இது உ.பி அல்ல; புல்டோசர் கலாசாரத்தை அனுமதிக்காதீர்" - மகாராஷ்டிரா அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜிநகர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த வாரம் திடீரென ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கவுன்சிலர் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்தது. கவுன்சிலர் மதீன் பட்டேல் மற்றும் கனீப் கான் ஆகியோரது... மேலும் பார்க்க

''இப்படியே விட்டா சரியா வராதுப்பா'' த.வெ.க. மீது காட்டமான விமர்சனம்; களத்தில் இறங்கிய எடப்பாடி!

''தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை ... மேலும் பார்க்க

ராகுல் காந்தி, பினராயி விஜயன் முன்னிலையில் வி.டி.சதீசன் கேரள முதல்வராக பதவியேற்பு Photo Album

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசன்கேரளத்தின் 13-வது முதல்வராக பதவியேற்ற்றுக்கொண்டார். மேலும் பார்க்க

கேரளம்: `மகளிர் இலவச பஸ் பயணம், முதியோருக்கு சிறப்பு துறை'- புதிய முதல்வர் வி.டி.சதீசன் அறிவிப்பு!

கேரளத்தின் 13-வது முதல்வராக வி.டி.சதீசன் இன்று பதவி ஏற்றார். திருவனந்தபுரம் செண்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தலைமைச் செயலாளர் கே.ஜெயதிலக், வி.டி. ... மேலும் பார்க்க

``திமுக கூட்டணிக் கட்சிகளின் காலில் விழுந்து..."- தவெக-வை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றாலும், ஆட்சி அமைக்கமுடியவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும் தவெக-வுக்கு அதிமுக-வின் ஒரு பிரிவினர் ஆதரவுக் கரம் நீட்... மேலும் பார்க்க

கோவை இருகூர் கொடூரம்: ``பெற்றோரும், ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அ... மேலும் பார்க்க