செய்திகள் :

LGBTQIA: ``பாலின அடையாளக் கோளாறு'' -விமர்சித்த மருத்துவ ஆணையம்; கண்டனம் தெரிவித்த உயர்நீதி மன்றம்!

post image

LGBTQIA+ சமூகத்தினரை 'பாலின அடையாளக் கோளாறு' உள்ளவர்கள் என்று தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட, அது தற்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. தன்பாலின ஈர்ப்பு சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கு விசாரணை நேற்றைய தினம் நடந்தது. அப்போது, 'LGBTQIA+ மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரிக்கவும், அவர்கள் தொடர்பான மருத்துவக் கல்வி பாடத்திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும்' என்பது தொடர்பான விவகாரத்தில், LGBTQIA+ சமூகத்தினரை 'பாலின அடையாளக் கோளாறு' உள்ளவர்கள் என தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதை விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம், 'பாலின அடையாளக் கோளாறு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தியிருப்பது உங்கள் மனநிலையை காட்டுகிறது. கோளாறு என்று சொன்னால் அனைத்தும் கோளாறுதான். LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கோளாறு இருப்பதாக கூற இயலாது. இயற்கை அவர்களை அப்படி உருவாக்கியுள்ளது' என குறிப்பிட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம்

'ஓரினச்சேர்க்கை மற்றும் பாலியல் தொடர்பான பாடங்கள் பள்ளிகளிலே கற்பிக்கப்படுவதால், மருத்துவப் பாடத்திட்டத்தில் அவை ஒரு பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை' என தேசிய மருத்துவ ஆணையம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது. இக்கூற்றால் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், 'தேசிய மருத்துவ ஆணையமே கற்பிக்கத் தயங்கினால், இதைவிட அறிவியல் மனப்பான்மையில் மிகவும் பின்தங்கிய பள்ளிகள் இவற்றை சிறப்பாக எதிர்கொள்ளும் என எவ்வாறு எதிர்பார்க்க இயலும்' என கேள்வி எழுப்பியது. தவிர, திருநங்கைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நலனுக்காக இரண்டு கொள்கைகளை முன்மொழிந்துள்ள தமிழக அரசிடம், ஒரே மாதிரியான கொள்கையை அமல்படுத்துவதில் ஏதேனும் சவால்கள் இருந்தால் அறிக்கை சமர்ப்பிக்கவும் கோரியது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் சாந்தகுமாரி, "நீதிமன்றம் சரியாகவே விமர்சித்திருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில், பிறவியிலேயே உடலில் நடைபெறும் மாற்றங்களை 'கோளாறு' என குறிப்பிடுவது பிறவியே குறைபாடு என குறிப்பிடுவதாகும். LGBTQIA+ சமூகத்தினருக்கும் பிற மனிதர்களைப் போல் சம அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என அனைவரும் போராடி வரும் நிலையில், பாடமாக எடுக்க வேண்டியவற்றை குறைபாடு போல சுட்டிக்காட்டும் தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாட்டை தவறென சொல்லாமல் எவ்வாறு சொல்வது? திருநங்கை, திருநம்பி என செந்தமிழில் சிறப்புப்பெயர்களால் குறிப்பிட்டு வருகிறோம். இத்தகைய மக்கள் பல வருடங்களாக நம்மோடு வாழ்ந்து வந்துள்ளனர் என நம் வரலாறே சொல்கிறது. ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது அவரவர் விருப்பம். பாலின உணர்வுகள் இயற்கையானவையே... அதை பிறழ்வு அல்லது குறைபாடு என குறிப்பிட இயலாது.

வழக்கறிஞர் சாந்தகுமாரி!

மாணவ மாணவியர் தங்களது உறுப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்வது அடிப்படை. அத்தகைய அடிப்படை பாலுணர்வு குறித்த கல்வியே வழங்கப்படாத நிலையில், LBGTQIA+ சமூகத்தினரின் பாலுணர்வு குறித்து பேச எவரும் முன்வரமாட்டார்கள். இதை குறைபாடு, தவறு என தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டதுபோல் தான் கூறுவர்" எனவும் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மிக ஆட்சி!" - திமுக அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்

2021-ல் திமுக ஆட்சி அமைந்த நாள்முதல் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை என ஒட்டுமொத்த திமுக-வினரும் `திராவிட மடல் ஆட்சி' என்ற சொல்லாடலை மேடை எங்கும் ஒலித்துவருகின்றனர். இவ்வாறிருக்கவே, கடந்த ஆண்டு ஜூலைய... மேலும் பார்க்க

``அண்ணாமலை ஏதாவது பேசிவிட்டு, வாபஸ் வாங்குவார்.. தி.மு.க-வை அசைக்க முடியாது'' -அமைச்சர் கீதாஜீவன்

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் துறை சார்பாக நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சம... மேலும் பார்க்க

ADMK: ``ஓபிஎஸ் 6 மாசம் அமைதியா இருந்தா, எடப்பாடியிடம் அவருக்காக பேசுவோம்'' -ராஜன் செல்லப்பா பேச்சு

ஓபிஎஸ் யை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஒரு 6 மாதத்திற்கு அவர் அமைதியாக இருக்க வேண்டுமென அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமா... மேலும் பார்க்க

Valentine's Day: ``ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான்..'' -உதயநிதியின் காதலர் தின வாழ்த்து!

அறநிலையத்துறையின் சார்பில் 30 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, 'ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான்..' என காதலர் தின வாழ்த்துகளை தெ... மேலும் பார்க்க

Doctor Vikatan: திருமணமாகாத பெண்கள் மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிக்கலாமா?

Doctor Vikatan: என் வயது 22. இன்னும் திருமணமாகவில்லை. நான் இத்தனை வருடங்களாக பீரியட்ஸின்போதுநாப்கின்தான்உபயோகித்துக் கொண்டிருந்தேன். இப்போது என் தோழிகளில் பலரும் நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப்பு... மேலும் பார்க்க

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்... அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா!

முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையின்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.அந்த அறிக்கையில், `பால்வளத்துறை, காதி மற்றும் கிராம தொழில் வாரியம் ஆகிய இ... மேலும் பார்க்க