செய்திகள் :

Lionel Messi: 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த மெஸ்ஸி; மூன்று நாள் பயணத்திட்டம் இதுதான்!

post image

'GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்திருக்கிறார்.

விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.

லயோனல் மெஸ்ஸி
லயோனல் மெஸ்ஸி

கடைசியாக 2011-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக விளையாட மெஸ்ஸி கொல்கத்தா வந்திருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அவர் இந்தியா வருகிறார்.

இதுகுறித்து டூர் அமைப்பாளர் சதத்ரு தத்தா கூறுகையில், "14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய கால்பந்துக்கும் உலக அரங்கிற்கும் உள்ள தொடர்பு மீண்டும் வளர்கிறது" என்று கூறியிருக்கிறார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, உலக கோப்பையை தாங்கிய 70 அடி உயரமுள்ள தனது உருவ சிலையை காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஹைதராபாத் சென்று அங்கு நடக்கும் போட்டியில் விளையாடுகிறார்.

மெஸ்ஸி உருவ சிலை
மெஸ்ஸி உருவ சிலை

இதனையடுத்து நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் பேஷன் ஷோவில் பங்கேற்க உள்ளார். மூன்றாவது நாள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.

'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Messi`GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா க... மேலும் பார்க்க

Vinesh Phogat: ``என்னுள் இருக்கும் நெருப்பு'' - மீண்டும் ஒலிம்பிக்குக்கு தயாராகும் வினேஷ் போகத்

மல்யுத்தத்தில் ஒலிம்பிக், காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டிப்போட்டிகள் என அனைத்திலும் வெற்றி பெற்று பதக்கங்களைக் குவித்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப்பெற்று மீண்... மேலும் பார்க்க

ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025; வெண்கலம் வென்ற இந்திய அணி!

14-வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை (21 வயதுக்கு உட்பட்டோர்) நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 இன்று வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி ... மேலும் பார்க்க

வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; தமிழ்நாட்டுக்காக அசத்தும் திருநெல்வேலி வீரர் இசக்கிமுத்து!

சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து, சௌராஷ்டிராவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார்... மேலும் பார்க்க

``எனது முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றிருக்கேன்'' - கேரம் வீரர் அப்துல் ஆஷிக்

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, கா... மேலும் பார்க்க

"நானும், கீர்த்தனாவும் ஒரே கிளப்பில் தான் பயிற்சி பெற்றோம்" - கேரம் வீராங்கனை காசிமா

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, கா... மேலும் பார்க்க