செய்திகள் :

Madhampatty Rangaraj: "கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை" - ஜாய் கிறிஸ்டில்டா

post image

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார்.

பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத்தை மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜாய் கிறிஸ்டில்டா, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், மாதம்பட்டி ரங்கராஜிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டும் என்றும் கோரி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

நேற்றைய தினம் ஜாய் கிறிஸ்டில்டாவுக்கும் தனக்கும் பிறந்த மகன்தான் இவர் என்றும், தந்தையாக அத்தனை கடமைகளையும் தான் கவனித்துவருவதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். தற்போது இது குறித்து ஜாய் கிறிஸ்டில்டா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஜாய் கிறிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிறிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ்

அவர், "கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள், முடியாத கேள்விகள் மற்றும் ஒரு தாயால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்த போராட்டங்களுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. உலகிற்கு நான் காட்டிய ஒவ்வொரு சிரிப்புக்குப் பின்னாலும் ஆயிரம் துளிக் கண்ணீர் மறைந்திருந்தது.

எனது மகன், ஒவ்வொரு குழந்தையும் பெறத் தகுதியான அவனுக்கான சரியான அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை இறுதியாகப் பெற்றுவிட்டான். மக்கள் தலைப்புச் செய்திகளைப் பார்த்தார்கள். மக்கள் கருத்துகளைப் பார்த்தார்கள். மக்கள் சமூக வலைத்தளங்களைப் பார்த்தார்கள். ஆனால், அமைதியில் கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை.

தன்னையே கேள்வி கேட்டுக்கொண்ட ஒரு தாயைப் பார்க்கவில்லை. தன் குழந்தைக்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்து நின்ற ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை. இந்தப் பயணம் யார் சரி, யார் தவறு என்று நிரூபிப்பதற்கானது அல்ல. இது எப்போதுமே ஒரு குழந்தைக்குச் சேர வேண்டிய அங்கீகாரம், அன்பு மற்றும் பாதுகாப்பிற்கானது.

இது எதையோ நிரூபிப்பதற்காக அல்ல. நான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகப் போராடவில்லை. என் மகன் ராகா ரங்கராஜ் ஒருநாள் விழித்தெழுந்து தன் சுயமரியாதையைக் கேள்வி கேட்கும் நிலை வரக்கூடாது என்பதற்காகவே நான் போராடினேன்.

நீ அன்பையும், மரியாதையையும், இந்த உலகில் உனக்கான சரியான இடத்தையும் பெற முழுத் தகுதியானவன் என்பதை எந்தச் சந்தேகமும் இன்றி நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இந்தச் சிறுவன் ராகா ரங்கராஜ், தான் யார் என்ற கேள்வியோடு வளரக்கூடாது என்பதில் மட்டுமே உறுதியாக இருந்தேன்.

மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ்

இன்று, அவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன். இது எப்போதுமே ஒரு தாய் தன் மகனுக்குக் கொடுத்த வாக்குறுதி சார்ந்த விஷயம். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக மாறினாலும், உனக்குச் சேர வேண்டிய உரிமைகளுக்காகப் போராடுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை மாதக்கணக்கில் சுமந்த பிறகு, இன்று என் இதயம் இறுதியாக அமைதியடைந்துள்ளது. இனி யாராவது என்னிடம் என் வாழ்வின் மிகப்பெரிய சாதனை எது என்று கேட்டால், என் பதில் புகழோ, வெற்றியோ அல்லது அங்கீகாரமோ அல்ல. என் பதில் எப்போதுமே இதுவாகத்தான் இருக்கும். என் மகனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

காதல் : ஆணவச் சமூகம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 11

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!`சினி'ஸ்கோப் 11காதல்18 வயதே ஆன ஒரு பள்ளிக்கூடத்து மாணவி ஐஸ்வர்யாவுக்கும், 20 வய... மேலும் பார்க்க

'எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள், அப்போது கண்ணதாசன்.!' - வைரமுத்து

கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா நேற்று (ஜூலை.30) சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, "தொழில்நுட்ப புரட்சி, தொலைபேசி கலாசாரம், சமூக ஊட... மேலும் பார்க்க

Madhampatty Rangaraj: `ராகா ரங்கராஜுக்கு துணை நிற்பேன்!' - உண்மையை உடைத்த மாதம்பட்டி ரங்கராஜ்

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார். பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத... மேலும் பார்க்க

Kavin: 'என் தங்க மகனே & மகளே'- இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான கவின் - மோனிஷா தம்பதி

'லிஃப்ட்', 'டாடா' போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார் கவின். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர் இப்போது சினிமாவில் பரபரப்பான லைன் அப்களுட... மேலும் பார்க்க

The Odyssey: "என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!" - 'தி ஒடிஸி' குறித்து கமல்ஹாசனின் பார்வை

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை கமல்ஹாசன் பெரிதும் விரும்பிப் பாராட்டுவார். The Ody... மேலும் பார்க்க

Simran: 10 வயது மாற்றுதிறனாளி சிறுமிக்கு செய்த உதவி! - சிம்ரன் செய்த நெகிழ்ச்சி செயல்

நடிகை சிம்ரன் 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை நேரில் சந்தித்து, அந்த சிறுமியின் கனவை நனவாக்கியிருக்கிறார். பிறக்கும்போதே ஒரு கையுடன் பிறந்து நிஷா, நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர். எதையும் தடையாக நினைத... மேலும் பார்க்க