செய்திகள் :

Manifesto: தேர்தல் வாக்குறுதியில் தீவிரம் காட்டும் கட்சிகள் - மக்களே உங்க கோரிக்கை என்ன? பகிருங்கள்!

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தவிர மார்ச் 15 வாக்கில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்போம் என்றும், இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகனாக அல்லாமல் கதாநாயகியாகவும் இருக்கும் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கை பணியில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றன.

அதிரடியாக தேர்தல் அறிக்கை தயாரித்து வரும் அரசியல் கட்சிகளிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

விவசாயம், விளையாட்டு, கல்வி போன்ற துறைகளில் எந்த மாதிரியான வாக்குறுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

மாதந்தோறும் மகளிர் உதவித்தொகையாக 2000 ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்கப்பட வேண்டுமா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

மதுவிலக்கு ஒழிப்பு வாக்குறுதி குறித்து உங்கள் கருத்து என்ன?

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் எப்படி இருக்க வேண்டும்?

தேர்தல் வாக்குறுதி தொடர்பாக உங்களின் கோரிக்கை வேலை வாய்ப்பா? கல்வி மேம்பாடா? விவசாய கடன் தள்ளுபடியா? குடிநீர் வசதியா? மருத்துவ வசதியா? விலைவாசி குறைப்பா? பெண்கள் பாதுகாப்பா? சாலை வசதியா? மின்சார இலவசமா?

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு முக்கிய கோரிக்கையை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கையே மக்களின் தேர்தல் அறிக்கையாக மாறட்டும்!

திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனை இன்றி மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்!

கடந்த மாதம் கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகக் கூறி திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உ... மேலும் பார்க்க

'CM கான்வாய்க்காக நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்; கடுப்பான முதல்வர் தரப்பு! - உளவுத்துறைக்கு 'ரெய்டு?'

தவெகவின் மூன்றாமாண்டு தொடக்க விழா விஜய் தலைமையில் பனையூரில் இன்று நடந்திருந்தது. அதே ECR யைக் கடந்துதான் முதல்வர் ஸ்டாலினும் மாமல்லபுரத்தில் சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைக்க சென்றிருந்தார். முதல்... மேலும் பார்க்க

"10.5 % இட ஒதுக்கீட்டை வழங்காமல், எத்தனை பேரை திமுக காவு வாங்கப்போகிறது?"- ராமதாஸ் கேள்வி

10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது? என்று கேள்வி எழுப்பி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தவிக்கும் இளைஞர்கள்அவர் வெளியிட... மேலும் பார்க்க

'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail

2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம். "இனி இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது என்று இந்தியப் பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார். உடனடியாக எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட முடியாது. ஆனால், மெல்ல மெல்... மேலும் பார்க்க

"பவள விழா பாப்பா... பழைய டப்பா... திமுக குறள்!" - திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்

தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், "தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம். இன்னைக்கு ... மேலும் பார்க்க