செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனை இன்றி மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்!

post image

கடந்த மாதம் கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகக் கூறி திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு போட்டார், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார். இதனால் தீபம் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றுவதற்கு போதிய ஏற்பாடுகள் எடுக்காத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது இன்று உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததது.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில், “ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சூழலை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்பதோ, மதிக்கக் கூடாது  என்பது நோக்கமல்ல" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

மேலும், நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்பதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

'CM கான்வாய்க்காக நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்; கடுப்பான முதல்வர் தரப்பு! - உளவுத்துறைக்கு 'ரெய்டு?'

தவெகவின் மூன்றாமாண்டு தொடக்க விழா விஜய் தலைமையில் பனையூரில் இன்று நடந்திருந்தது. அதே ECR யைக் கடந்துதான் முதல்வர் ஸ்டாலினும் மாமல்லபுரத்தில் சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைக்க சென்றிருந்தார். முதல்... மேலும் பார்க்க

Manifesto: தேர்தல் வாக்குறுதியில் தீவிரம் காட்டும் கட்சிகள் - மக்களே உங்க கோரிக்கை என்ன? பகிருங்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க

"10.5 % இட ஒதுக்கீட்டை வழங்காமல், எத்தனை பேரை திமுக காவு வாங்கப்போகிறது?"- ராமதாஸ் கேள்வி

10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது? என்று கேள்வி எழுப்பி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தவிக்கும் இளைஞர்கள்அவர் வெளியிட... மேலும் பார்க்க

'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail

2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம். "இனி இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது என்று இந்தியப் பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார். உடனடியாக எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட முடியாது. ஆனால், மெல்ல மெல்... மேலும் பார்க்க

"பவள விழா பாப்பா... பழைய டப்பா... திமுக குறள்!" - திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்

தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், "தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம். இன்னைக்கு ... மேலும் பார்க்க