செய்திகள் :

Mohanlal: "அது என்னுடைய தவறுதான்!'' - குழந்தைகள் குறித்து சுசித்ரா மோகன்லால்

post image

மோகன்லாலைத் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். விஸ்மயா மோகன்லால் நடித்திருந்த 'தொடக்கம்' திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந்தது.

நடிகர் மோகன்லாலின் பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவருக்கும் தாய்மொழியான மலையாளம் சரளமாகப் பேச வராதது குறித்து மோகன்லாலின் மனைவி சுசித்ரா மோகன்லால் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Mohanlal - Vismaya Mohanlal
Mohanlal - Vismaya Mohanlal

இதுகுறித்து அவர் கூறுகையில், "பிரணவ் ஆறாம் வகுப்பு படிக்கும்போதும், விஸ்மயா மூன்றாம் வகுப்பு படிக்கும்போதும் போர்டிங் ஸ்கூலில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால், அவர்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டிய சூழல் இருந்தது.

அவர்கள் வீட்டிற்கு விடுமுறைக்கு வரும்போதும் நான் அவர்களிடம் ஆங்கிலத்தில்தான் பேசுவேன். அது முற்றிலும் என்னுடைய தவறுதான். என்னுடைய குடும்பப் பின்னணியைப் பார்த்தால், என் தந்தை பாதி தமிழும் பாதி மலையாளமும் பேசுபவர்.

என் அம்மா முழுமையான மலையாளத்தைச் சேர்ந்தவர். அதனால் நாங்கள் வீட்டில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் என கலந்துதான் பேசுவோம். மேலும், மோகன்லால் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை.

அவர்களின் உறவினர் குழந்தைகளும் மெட்ராஸில் பிறந்து வளர்ந்ததால் அவர்களும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள்.

இதனால்தான் வளர வளர அவர்களுக்கு மலையாளத்துடனான தொடர்பு குறைந்துவிட்டது. இப்போது மாயாவுக்கு மலையாளம் புரியும், பேசவும் தெரியும்.

Mohanlal - Suchithra
Mohanlal - Suchithra

ஆனால், பேசுவதற்கு ஒரு தயக்கமும் தன்னம்பிக்கைக் குறைபாடும் இருக்கிறது. தவிர, என் பேச்சிலேயே தமிழ் கலந்த உச்சரிப்பு இருக்கும் என்று அனைவரும் சொல்வார்கள்.

பிரணவ் படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு, செட்டில் பலருடன் பேசிப் பேசி இப்போது அவரது மலையாளம் நன்றாக முன்னேறியிருக்கிறது. ஆனால் மாயா, ஒரு கதையைக் கேட்டால் வசனங்களைக் கற்றுக்கொள்ளவே ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் அவகாசம் கேட்கிறாள்.

ஆங்கிலத்தில்தான் ஸ்கிரிப்ட் படித்துப் புரிந்துகொள்கிறாள். அதனால்தான் அவள் புதுப் படங்களில் கமிட் ஆக கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கிறாள்" என்று பகிர்ந்திருக்கிறார்.

Drishyam 4: ``திரிஷ்யம் அடுத்த பாடம் வரும்" - தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதி!

திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் படத்தின் 4-ம் பாகம் உருவாகவுள்ளது எனத் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்திருக்கிறார்.கடந்த மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3', வெ... மேலும் பார்க்க

Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!

எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதர... மேலும் பார்க்க

Bethlehem Kudumba Unit: " 'பிரேமலு 2' முடிந்து போன கதை!" - 'பிரேமலு' இயக்குநர் கிரிஷ் ஓபன் டாக்

'பிரேமலு' படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்திருக்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் நாளை திரைக்கு வருகிறது.Premalu'பிரேமலு' கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்த... மேலும் பார்க்க

Mohanlal: 'ஆர்வம் தரும் கதைகள்'; ஒரே நேரத்தில் 7 இயக்குநர்களின் படம்; மோகன்லால் தந்த சர்ப்ரைஸ்!

நடிகர் மோகன்லால், தன்னுடைய அடுத்த 7 புதிய திரைப்படங்களை மொத்தமாக அறிவித்து ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், 'ஆர்வம் தரும... மேலும் பார்க்க

Mohanlal: சபரிமலையில் மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு நடந்த அனுமதி மறுப்பு - பின்னணி என்ன?

மோகன்லால் மற்றும் இயக்குநர் தருண் மூர்த்தி கூட்டணியில் 'தொடரும்' திரைப்படம் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி மீண்டும் இணைந்தது. அந்தப் படத்திற்கு... மேலும் பார்க்க

"மனசோர்வுடன் இருக்கும்போதெல்லாம் அவரிடமிருந்து மெசேஜ் வரும்!" - நெகிழும் அனுபமா பரமேஸ்வரன்

'பிரேமம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் ஊடகவியலாளர் தன்யா வர்மாவுக்கு அளித்த பேட்டியில், காதலித... மேலும் பார்க்க