செய்திகள் :

National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

post image

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

Raayan - 72nd National Awards
Raayan - 72nd National Awards

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய பயணம், முயற்சி, சிந்தனை என எல்லாமே சரியாக இருக்கும்போது, அதற்கான அங்கீகாரம் தானாகவே தேடி வந்துவிடுகிறது.

இதில் நாம் பரிந்துரை செய்யவோ அல்லது இன்ப்ளூயன்ஸ் செய்யவோ எதுவும் இல்லை இது முழுக்க முழுக்க அவருடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

ஜூரிக்கள் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் இந்த விருது. என் மகனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பது ஒரு தகப்பனாக எனக்கு மிகுந்த பெருமையளிக்கிறது.

அவர் தொடர்ந்து இதேபோல் பல விருதுகளை வெல்வார் என்று நம்புகிறேன். நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த நற்செய்தி வந்தது. வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடினோம். ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் இது மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது." என்றார்.

 தனுஷ், செல்வராகவன், கஸ்தூரி ராஜா
தனுஷ், செல்வராகவன், கஸ்தூரி ராஜா

மேலும் தொடர்ந்த அவர், "தனுஷை விடப் பெரிய நடிகர்கள் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இன்ப்ளூயன்ஸ் செய்து விருதை வாங்கிவிட முடியுமா என்ன?

இது அரசின் முடிவே தவிர வேறு எதுவும் இல்லை. நான்கு பேரிடம் பேசி, 'இந்த விருதை எனக்குக் கொடுங்கள்' என விருதுகளுக்கு தனுஷ் ஏங்குபவர் கிடையாது. அந்த அளவுக்குத் தனுஷுக்குப் புத்திசாலித்தனம் கிடையாது. இதற்கு முன்பே 'ஆடுகளம்', 'அசுரன்' படங்களுக்காக அவர் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். விருது அறிவிக்கப்படும்போது அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்கிறோம், அவ்வளவே" என்று கூறினார்.

சமீபத்தில் தனுஷின் ரசிகர் மன்ற கொடி அறிமுகப்படுத்தப்பட்டு, சமூக வலைதளங்களில் அது அரசியல் வருகைக்கான அறிகுறியா என்ற விவாதம் தீவிரமாகப் பேசப்பட்டது.

இதுகுறித்து அவர், "அவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா இல்லையா என்பது பற்றியெல்லாம் நாங்கள் அவரிடம் கேட்பதில்லை. நாங்கள் சந்தித்துக் கொள்ளும்போது படம், சம்பளம், அரசியல் அல்லது இந்த மாதிரி கொடி விஷயங்களைப் பற்றிப் பேசுவதில்லை." என்றார்.

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

ஜன நாயகன்: "அதை எதிர்த்து சண்டைப்போடுவதற்கான நேரம் எங்களிடம் இல்லை" - தடைகள் குறித்து அ. வினோத்

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

CJP: "இது அரசியல் இல்லை... மனிதநேயம்!" - டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு வரலட்சுமி ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

பிதாமகன் : அன்பின் ஈரம்! | ஆதி தாமிரா | சினி'ஸ்கோப் 08

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!சினி'ஸ்கோப் 08பிதாமகன் : அன்பின் ஈரம்!”பெத்தவ புகையோடிப் போச்சேவளத்தவன் புகைகூட... மேலும் பார்க்க