செய்திகள் :

NEET : 30 நிமிடத்தில் கைமாறிய வினாத்தாள்:ரூ.10 லட்சத்துக்கு வாங்கி ரூ.15 லட்சத்தில் விற்ற மாணவர்

post image

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததை தொடர்ந்து ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் படித்த மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். மற்றொருபுறம் மோசடி பேர்வழிகளிடம் பணம் கொடுத்து நீட் வினாத்தாள்களை வாங்கியவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். போலீஸார் மற்றும் சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணையில் வினாத்தாளை கசியவிட்டது நாசிக்கை சேர்ந்த சுபம் கெய்ர்னார் என்ற மாணவர்தான் என்று தெரிய வந்துள்ளது. அவரை மகாராஷ்டிரா குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சி.பி.ஐ வசம் ஒப்படைத்து இருக்கின்றனர்.

சுபம் பி.ஏ.எம்.எஸ் எனப்படும் ஆயுர்வேத மருத்துவம் படித்து வருகிறார். சுபம் அந்த வினாத்தாளை புனேயை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சத்திற்கு வாங்கி ஹரியானாவை சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரிய வந்துள்ளது.

அதோடு ஆரம்பத்தில் நாசிக் அச்சகத்தில் இருந்து வினாத்தாள் கசிந்ததாக செய்தி வெளியானது. ஆனால் விசாரணையில் நாசிக்கில் அச்சிடப்படவில்லை என்றும், நாசிக்கில் இருந்து கூரியர் மூலம் நீட் வினாத்தாள் அனுப்பப்பட்டபோது வினாத்தாள் கசிந்ததாக தெரிய வந்துள்ளது. வினாத்தாள் கூரியருக்கு அனுப்பியபோது அது இருந்த பெட்டி 30 நிமிடத்திற்கு திறக்கப்பட்டு உள்ளே இருந்த வினாத்தாளை எடுத்து ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து எடுத்துள்ளனர். மொபைல் மூலம் எடுத்தால் சரியாக தெரியாது என்பதால் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்ததாக தெரிய வந்துள்ளது.

ஸ்கேன் செய்யப்பட்ட நகல் சுபமிற்கு டெலகிராம் மூலம் கிடைத்துள்ளது. அதனை சுபம் ஹரியானா பிரமுகருக்கு விற்பனை செய்துள்ளார். மோசடி வெளியானதும் சுபம் தனது அடையாளத்தை மறைப்பதற்காக மொட்டைபோட்டுக்கொண்டு திரிந்தார். அவர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை குற்றப்பிரிவு போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். நீட் வினாத்தாள் மோசடி தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இந்த விவகாரத்தில் வெளியாகி வருகிறது.

நாட்டில் குற்றச் சம்பவங்களின் சதவிகிதம் குறைந்தாலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

தேசிய குற்ற ஆவண காப்பக தரவவுகளின் அடிப்படையில் குழந்தைகள் உரிமை அமைப்பான 'க்ரை' (CRY) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ஒட்டுமொத்த குற்றச்சம்பவஙகளின் எண்ணிக்கை 10.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: எரிந்த நிலையில் ராணுவ வீரர், அவர் தந்தை உடல்கள் - திருமணம் மீறிய உறவால் நடந்த பயங்கரம்

கிருஷ்ணகிரி அருகே இருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையானது ராணுவ வீரரும் அவர் தந்தை என்பதும், திருமணம் மீறிய விவகாரத்தால் இக்கொலை நடந்துள்ளத... மேலும் பார்க்க

போனுக்கு வந்த திருமண அழைப்பிதழ்; 5 லட்சத்தை இழந்த நபர்- புது வகை மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

பெங்களூருவைச் சேர்ந்த நூர் நஹித் கான் என்ற 42 வயது தொழிலதிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், "எங்கள் திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். முழுமையான விவரங்களுக்குக் கீழே இ... மேலும் பார்க்க

மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்; காட்டிக்கொடுத்த மூச்சு பரிசோதனை கருவி!

தூத்துக்குடி நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீஸார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இரு... மேலும் பார்க்க

"அவர் பக்கத்திலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள்" - காதலன் இறந்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு

கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பளா அருகே உள்ள கிதூர் குண்டங்கேரடுக்கை பகுதியைச் சேர்ந்த ஜெயானந்தன் - தேவி தம்பதியினரின் மகள் பிரபுல்லா (26). பாலக்காட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக... மேலும் பார்க்க

சிவகாசி: மகளைக் காதலித்த 2 இளைஞர்களை அடுத்தடுத்து கொலை செய்த தந்தை; சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள செவளூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்... மேலும் பார்க்க