செய்திகள் :

Parasakthi: 'ரூ.8.39 கோடி சம்பள பாக்கி' - தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த சுதா கொங்கரா

post image

இயக்குநர் சுதா கொங்கரா, தான் இயக்கிய 'பராசக்தி' திரைப்படத்திற்கான சம்பளப் பாக்கித் தொகை ரூ. 8.39 கோடியை வழங்கக் கோரி, டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 'பராசக்தி' திரைப்படம் வெளியாகியிருந்தது.

சுதா கொங்கரா
சுதா கொங்கரா

'பராசக்தி' திரைப்படத்தை இயக்குவதற்காக இயக்குநர் சுதா கொங்கராவுக்கும், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, அவருக்கான மொத்தச் சம்பளம் ரூ.15 கோடி எனப் பேசப்பட்டிருக்கிறது. இதனுடன் ஜி.எஸ்.டி தனியாகச் சேர்க்கப்பட்டு, மொத்தத் தொகை ரூ.17.70 கோடி என முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தின்படி, 'பராசக்தி' படம் தொடர்பான ஒட்டுமொத்த அறிவுசார் சொத்துரிமைகளையும் சுதா கொங்கரா தயாரிப்பு நிறுவனத்திற்கு முறைப்படி மாற்றிக் கொடுத்திருக்கிறார்.

'பராசக்தி' படமும் ஜனவரி மாதமே வெளியாகிவிட்டது. ஆனால், இதுவரை அவருக்கு ரூ.9.31 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மீதமுள்ள ரூ.8.39 கோடி தொகையைத் தயாரிப்பு நிறுவனம் இன்னும் வழங்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 'பராசக்தி' திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது 'டான் பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்தை வரும் ஜூலை 10-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சம்பளப் பாக்கியைத் தராமல் தங்களது அடுத்த படத்தை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் பணிகளைத் தொடங்கியதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என சுதா கொங்கரா மனுவில் கோரியுள்ளார்.

பராசக்தி திரைப்படம்
பராசக்தி திரைப்படம்

மேலும், 'பராசக்தி' படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், 'இதயம் முரளி' படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்றும் சுதா கொங்கரா கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, "ஜூலை 8-ம் தேதி வரை 'பராசக்தி' திரைப்படத்தை தொலைக்காட்சிகளில் வெளியிடக் கூடாது" என உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூலை 7-ம் தேதிக்குள் தங்களது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'விஜய்யைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன்..!'- பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்க வைரமுத்து கோரிக்கை

இயக்குநர் இமயம் பாரதிராஜா ஜூன் 10-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் பாரதி... மேலும் பார்க்க

Lingam: "ஷங்கர் சார், அவரின் தயாரிப்பில் படம் பண்ணச் சொன்னார்!" - லக்ஷ்மி சரவணக்குமார் பேட்டி

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இப்போது 'லிங்கம்' வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஜூனியர் விகடனில் தொடர்கதையாக வெளிவந்த 'லிங்கம்' கதையைத் தழுவி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டிருக்கிற... மேலும் பார்க்க

பாக்யராஜ்: "பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி" - சாந்தனு

இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பாக்கியராஜ் ஜூன் 27-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்பட... மேலும் பார்க்க

"அரசுத் திரையரங்குகள், கலைஞர்களுக்கான வீடுகள்" - முதல்வர் விஜய்க்கு சீனு ராமசாமியின் 6 கோரிக்கைகள்

முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அரசின் கவனத்திற்கு முக்கியமான ஆறு கோரிக்கைகளைக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் ... மேலும் பார்க்க

அழகி: ஒரே வாக்கியத்தில், வாழ்வின் மொத்தக் காதலையும் தந்துவிடுகிறாள் | `சினி'ஸ்கோப் 02 | ஆதி தாமிரா

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!அழகி: காதலின் வாழ்த்து!`சினி'ஸ்கோப் 02”உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா சண்முக... மேலும் பார்க்க

Lingam: "நான் நடிப்பையும் அரசியலையும் தனித்தனியாகத்தான் பார்க்கிறேன்" - போஸ் வெங்கட் பேட்டி

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 80களில் குமரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எழுத்தாளர் பா. ராஜந... மேலும் பார்க்க