கோவை: MRF Mogrip சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப்; கொடிசியா மைதானத்தில் சீறிப் பாய்ந...
PM SHRI திட்டம்: ``தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" - அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!
தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்தது. தற்போது தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி, தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக அர்த்தமாகும் என்பதால், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

மேற்கு வங்க தேர்தல் முடிவில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு தேசியக் கல்விக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதால், இந்த அரசு என்ன முடிவுகளை முன்வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கூடுதல் கவனம் பெற்றது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ``தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது எங்கள் அரசின் கொள்கைகளில் அடிப்படையானது. நம்முடைய இரு மொழிக்கொள்கையில் அவரவரின் தாய்மொழி மிக முக்கியம்.
உறவுகளிடம் பேச தாய் மொழியும், உலகிடம் பேசுவதற்கு ஆங்கிலமும் போதும். அடுத்தடுத்தக் கூட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கிறோம். இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். நம் பள்ளிக் கல்வித்துறைக்கென ஓர் இலக்கு இருக்கிறது. அதன்படி என்னென்னவெல்லாம் இந்த துறைக்கு வழங்கமுடியுமோ... அத்தனையையும் சிறப்பாக ஆலோசனைகளுக்குப் பிறகு செய்வோம் " எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


















