செய்திகள் :

Raai Lakshmi: "புடவையில் நடித்தாலும் என்னை கிளாமரான நாயகியாகவே பார்க்கிறார்கள்!" - ராய் லக்ஷ்மி

post image

'தர்மபுரி', 'தாம் தூம்', 'காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகை ராய் லட்சுமி. முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இரண்டு ஆண்டுகள் ஓய்வில் இருந்தார் ராய் லட்சுமி

தற்போது மீண்டும் இவர் நடிப்பிற்கு திரும்பவிருக்கிறார். இந்த கம்பேக் குறித்தும், அவர் மீதான பார்வை குறித்தும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.

Raai Lakshmi
Raai Lakshmi

அந்தப் பேட்டியில் அவர், "நான் நடிக்க வந்த காலத்தில் சினிமாத் துறை முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. அப்போது நாங்கள் ஒரு வருடத்திற்கு ஐந்து படங்கள் வரை நடிப்போம்.

வாய்ப்பு கிடைத்தால் ஆறாவது படத்தையும்கூட முடித்துவிடுவோம். ஆனால் இன்று நிலைமை மாறிய பிறகு, 'எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்' என்றாகிவிட்டது.

ஆரம்ப காலத்தில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நான் பெரிய அளவில் கவனம் செலுத்தியதில்லை. நல்ல அனுபவங்களும் கெட்ட அனுபவங்களும் கிடைக்கும் வரை, எது சரியான படம், எது தவறான படம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் தோல்விப் படங்களையும் பார்த்திருக்கிறேன், வெற்றிப் படங்களையும் பார்த்திருக்கிறேன். விஷயங்களைச் சொந்தமாக அனுபவித்துத் தெரிந்துகொள்வதே எனக்குப் பிடிக்கும்.

அதனால்தான், ஒரு குறிப்பிட்ட வகை கதாபாத்திரங்களுக்குள் என்னை நான் எப்போதும் சுருக்கிக்கொண்டதில்லை. மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டியுடன் நான் நடித்திருக்கிறேன். அங்கு பார்வையாளர்கள் என்னை 'கேர்ள் நெக்ஸ்ட் டோர்' எனப் பார்க்கிறார்கள்.

Raai Lakshmi
Raai Lakshmi

ஆனால் தமிழில், நான் புடவை கட்டிக்கொண்டு நடித்தால்கூட மக்கள் என்னைக் கிளாமரான நாயகியாகவே பார்க்கிறார்கள். என் மீது இந்த கிளாமர் பிம்பம் ஏன் படிந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

திரையுலகில் ஒரு குறிப்பிட்ட முறையில் அறிமுகமாகி, அந்த அடையாளம் மக்களுக்குப் பிடித்துவிட்டால், மீண்டும் மீண்டும் நம்மிடம் இருந்து அதையேதான் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், நான் போதுமான அளவிற்கு கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். இனிமேல் கிளாமர் இல்லாத, யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். மேக்கப்கூட இல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க