Neelira: "குறைந்த திரைகளே கிடைத்தது; உயிர்த்தெழச் செய்ய உங்களால் முடியும்!" - கா...
Ranjan: "பிரசாந்தை பார்த்து பொறாமைப்படுவேன்!" - விஷால் கலகல!
தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது.
தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு 'ரஞ்சன்' என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், 'அந்தகன்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார்.

பிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயாணியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர் விஷால் பேசுகையில், "ஒரு நாள்ல ஒரே இடத்துல ரெண்டு பாசிடிவ்வான விஷயம் நடக்கிறதுல ரொம்பவே சந்தோஷம்.
நான் உதவி இயக்குநராக இருந்தப்போ, பிரசாந்தோட படங்களை வியந்து பார்த்திருக்கேன்.
நாங்க விசிலடிச்சு கொண்டாடின நடிகர் இவர். அப்போ எங்க பக்கத்துல இருக்கிற பெண்களெல்லாம் பிரசாந்தை சைட் அடிப்பாங்க.
அதையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். தொடர்ந்து சில்வர் ஜூப்ளி கொடுத்துட்டு இருப்பார்.

தியாகராஜன் சாருடைய விஷன்தான், இன்னைக்கும் பிரசாந்தை இவ்வளவு பெரிய உயரத்துல நிக்க வச்சிருக்கு.
என்னுடைய அப்பா என்கிட்ட 'தியாகராஜன் சார் எப்படி அவருடைய பையனை கொண்டு வருகிறாரோ, அப்படி நான் உன்னை சினிமாவுக்குள்ள கூட்டி வருவேன்'னு தியாகராஜன் சாரை எடுத்துக்காட்டாக சொல்லுவார்.
வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தேவயாணி மேம் அத்தனை பரிச்சயம். அவருடைய லெகசியை தொடர்வதற்கு ப்ரியங்காவிற்கு பொறுப்புகள் இருக்கு." என்றார்.













