செய்திகள் :

SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?

post image

தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடங்குகிறது.

இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை திமுக தொடங்கி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களையும், விமர்சனங்களையும் பார்க்கலாம்.
SIR - சிறப்புத் தீவிரத் திருத்தம்
SIR - சிறப்புத் தீவிரத் திருத்தம்

1. தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தம் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்க உள்ளது. கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் தொகை தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்குள் எப்படி சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ள முடியும்.

2. ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரிகளும் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை நேரில் செல்ல வேண்டும் என்கிற உத்தரவைப் பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இந்தக் குறுகிய காலகட்டத்திற்குள் வாக்குச்சாவடி அதிகாரிகள் எப்படி அத்தனை வீடுகளுக்கும் மூன்று முறை செல்ல முடியும்? இதனால், அவர்கள் பீகாரைப் போல ஒரே வீட்டில் அமர்ந்து திருத்தப் பணிகளை மேற்கொள்வார்கள். இது எப்படிச் சரியாகும்?

3. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்? இந்த அவசரத்தினால் முழுமையான திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாது.

4. வெளிமாநிலத்தவர்களுக்கும் வாக்குரிமை கொடுக்கும் முயற்சியே இந்த அவசர திருத்தப் பணி. வெளிமாநிலத்தவருக்கு இங்கே வாக்குரிமை கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பர்யம், கட்சிகள் ஆகியவை அவர்களுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தேசியக் கட்சிக்கே வாக்களிப்பார்கள். ஆக, இது வாக்குகளைத் திருடும் முயற்சி ஆகும்.

SIR எதிர்ப்பு கூட்டம் - தமிழ்நாடு
SIR எதிர்ப்பு கூட்டம் - தமிழ்நாடு

5. பீகாரைப் போல பல தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படலாம். மேலும், தகுதியில்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம்.

இப்படி பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன தமிழ்நாட்டு கட்சிகள்.

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் வேறு என்னென்ன பிரச்னை உள்ளன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் மக்களே... கமென்ட் செய்யுங்க!

"கொலை முயற்சி தாக்குதல்; அன்புமணி தான் காரணம்" - பாமக எம்.எல்.ஏ அருள்

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர்களை பா.ம.க, எம்.எல்.ஏ அருள் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போ... மேலும் பார்க்க

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா? பரபர பீகார் தேர்தல்

லாலுவின் வீழ்ச்சியும் நிதிஷின் எழுச்சியும்!பீகாரில் 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அந்தக் கட்சியில் ஆதிக்க சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாகச் சர்ச்சை ... மேலும் பார்க்க

`போலீஸை பொருட்படுத்தாமல் அடிதடி' - பா.ம.க, எம்.எல்.ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி துக்க நிகழ்விற்கு, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கலந்து கொ... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: 32% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு; 40% பேர் கோடீஸ்வரர்கள்! | Report

பீகார் சட்டமன்றத்திற்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

SIR: ``நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்" - தமிழிசை விளக்கம்!

தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை செளந்தரராஜன் ‘வாக்காளரின் வலிமை’ என்ற புத்தகத்தை எழு... மேலும் பார்க்க

பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி; ம.செ ஆகிறார் கதிர் ஆனந்த்!

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று திமுக தலைமைக் கழக பதவி நியமன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய... மேலும் பார்க்க