செய்திகள் :

`உனக்காகத்தான் மனைவியை கொன்றேன்'- காதலிக்குத் தகவல் சொன்ன கணவன்

post image

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் மகேந்திர ரெட்டி மற்றும் கிருத்திகா ரெட்டி. கணவன் மனைவியான இருவரும் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திடீரென டாக்டர் கிருத்திகா உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரை அவரின் கணவர் மகேந்திர ரெட்டி உடனே மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் மருத்துவமனையில் கிருத்திகா ரெட்டி இறந்து போனார். உடனே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கிருத்திகாவின் உடம்பு உருப்புகளில் Propofol எனப்படும் ஒருவகை மயக்க மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மகேந்திர ரெட்டியின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது மயக்க மருந்து மற்றும் இன்ஜெக்சன் டியூப் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் டாக்டர் மகேந்திரா கைது செய்யப்பட்டார்.

தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி கிருத்திகா இயற்கையான முறையில் இறந்தது போன்று மகேந்திரா காட்டியிருக்கிறார். ஆனால் டாக்டர் மகேந்திராவின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது அவர் தன் மனைவியைக் கொலை செய்திருப்பதை ஒப்புக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

பேமெண்ட் ஆப் ஒன்றின் மூலம், தான் காதலிக்கும் பெண்ணிற்கு மகேந்திரா மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் 'உனக்காகத்தான் என் மனைவியைக் கொலை செய்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் கூறுகையில்,''இதுவரை சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையில் பார்க்கையில் பெண் டாக்டரின் கொலையில் அவரின் கணவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பெண் டாக்டரை ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர் டாக்டர் மகேந்திராதான். பெண் டாக்டரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது''என்று கூறினார்.

புதுச்சேரி: `என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சான்!’ - சோகத்தில் முடிந்த முறையற்ற காதல்

புதுச்சேரி வம்பாகீரப்பளையம் `பாண்டி மெரீனா’ செல்லும் சாலையில், நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் பிரசவம் பார்த்த அசாம் தம்பதி; செவிலியரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை; என்ன நடந்தது?

சிவகாசியில் சாரதா நகர் பகுதியில் வசிப்பவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஜூலில் - அஷ்மா காத்துன் தம்பதி. சிவகாசியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை பார்த்து வரும் இவர்களுக்கு ஏற்கனவே... மேலும் பார்க்க

ஆதாரங்களை கையில் வைத்து சுற்றிய குற்றவாளிகள் - கோவை மாணவி வழக்கில் வெளியான புதிய தகவல்

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம், “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் (30), கார்த்திக் (21) இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி பகுத... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நள்ளிரவு கிடைத்த தகவல்; சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர்; என்ன நடந்தது?

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. காரில் தன் நண்பருடன் அமர்ந்து பேசி வந்த மாணவிக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் வழக்கு: கொந்தளித்த பாஜக.. சூறையாடிய நாம் தமிழர்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை கல்லூரி மாணவியை 3 பே... மேலும் பார்க்க

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்த... மேலும் பார்க்க