செய்திகள் :

சிவகாசி: வீட்டில் பிரசவம் பார்த்த அசாம் தம்பதி; செவிலியரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை; என்ன நடந்தது?

post image

சிவகாசியில் சாரதா நகர் பகுதியில் வசிப்பவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஜூலில் - அஷ்மா காத்துன் தம்பதி. சிவகாசியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை பார்த்து வரும் இவர்களுக்கு ஏற்கனவே 9 வயது, 7 வயது, 5 வயது 3 வயதில் 4 குழந்தைகள் உள்ள நிலையில் 5வது முறையாக அஷ்மா காத்துன் கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியான அஷ்மா காத்துனுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டில் வைத்து அவராகவே பிரசவம் பார்த்துள்ளார். அவர்களுக்கு 5வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

அப்துல் ஜூலில்
அப்துல் ஜூலில்

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுகாதார துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த கங்காகுளம் பகுதி கிராம சுகாதார செவிலியர் கிரேஸ் வீட்டில் வைத்து பிரசவம் நடந்ததை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தாய், சேய் இருவரையும் ஆட்டோவில் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்து பிரசவம் நடந்தது போல் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தாய் மற்றும் குழந்தை தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகாசி மருத்துவமனை
சிவகாசி மருத்துவமனை

சம்பவமறிந்த சுகாதார துறை அதிகாரிகள் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த பெண்ணின் கணவர் அப்துல் ஜூலிலை விசாரித்தபோது, ஏற்கனவே பிறந்த தங்களது குழந்தைகள் நான்கு பேரையும் அசாமில் இருந்தபோது வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்ததாகவும், அந்த வகையில் 5வது குழந்தையும் தானே பிரசவம் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரைக் கண்டித்ததுடன், கங்காகுளம் கிராம சுகாதார செவிலியர் கிரேஸ் என்பவரைப் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து சிவகாசி சுகாதார துணை இயக்குநர் ஜெகவீர பாண்டியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

`உனக்காகத்தான் மனைவியை கொன்றேன்'- காதலிக்குத் தகவல் சொன்ன கணவன்

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் மகேந்திர ரெட்டி மற்றும் கிருத்திகா ரெட்டி. கணவன் மனைவியான இருவரும் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். கடந்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சான்!’ - சோகத்தில் முடிந்த முறையற்ற காதல்

புதுச்சேரி வம்பாகீரப்பளையம் `பாண்டி மெரீனா’ செல்லும் சாலையில், நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந... மேலும் பார்க்க

ஆதாரங்களை கையில் வைத்து சுற்றிய குற்றவாளிகள் - கோவை மாணவி வழக்கில் வெளியான புதிய தகவல்

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம், “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் (30), கார்த்திக் (21) இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி பகுத... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நள்ளிரவு கிடைத்த தகவல்; சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர்; என்ன நடந்தது?

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. காரில் தன் நண்பருடன் அமர்ந்து பேசி வந்த மாணவிக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் வழக்கு: கொந்தளித்த பாஜக.. சூறையாடிய நாம் தமிழர்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை கல்லூரி மாணவியை 3 பே... மேலும் பார்க்க

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்த... மேலும் பார்க்க