செய்திகள் :

Sonam Wangchuk: ``மோடி அரசு தொடர்ந்து பாராமுகமாக இருக்குமானால்..." - எம்.பி ஆ.ராசா

post image

‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்ற ஒற்றைக் கோரிக்கையோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக். அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சோனம் வாங்சுக்கை சந்தித்த நிலையில், நேற்று மாலை திமுக எம்.பி ஆ.ராசாவும் அவரை சந்தித்து திமுக தரப்பின் ஆதரவை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தேசிய அளவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ள விவகாரம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே கடுமையான மன உளைச்சலையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

இந்த ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானமும், நீட் விலக்கு சட்ட மசோதாவும் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினார். இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் உடல் எடை 9 கிலோவிற்கும் அதிகமாகக் குறைந்து, உடல்நிலை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சோனம் வான்சுக்வுக்கு அரசியல் ரீதியான முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

சோனம் வான்சுக், தி.மு.க-விற்கும் அதன் தலைவருக்கும் நன்றி தெரிவித்தார். அவருடன் உண்ணாவிரதம் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடமும் தி.மு.க தலைவர் சார்பில் ஆதரவு பகிர்ந்துகொள்ளப்பட்டது. நாடாளுமன்றம் கூடும் போது, நீட் விவகாரம் மற்றும் தமிழகத்தின் முக்கியப் பிரச்னையான மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பிரச்னைகள் குறித்து தி.மு.க மிக வலுவாகக் குரல் எழுப்பும்.

போராட்டத்தைக் கைவிடுமாறு சோனம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், "எனது உயிர் முக்கியமல்ல; எனது இறப்பின் மூலமாவது இந்த அரசின் கண் திறந்து, மண்ணில் எழுச்சி ஏற்படும் என்றால், என் உயிரைத் தரவும் தயாராக இருக்கிறேன்" என்று அவர் உறுதியுடன் கூறியுள்ளார். இவ்வளவு தீவிரமான போராட்டத்திற்குப் பிறகும் மத்திய மோடி அரசு தொடர்ந்து பாராமுகமாக இருக்குமானால், தேச அளவில் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்." என்றார்.

"ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா..!” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுகவை மறைமுகமாக சாடியிருக்கிறார். " 'இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆட்டமானு கேக்குறாங்க'... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்க திட்டமா?' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 'ரெஸ்டோ பார்' எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக த... மேலும் பார்க்க

"ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்; அதற்கு ஒருவர் தான் காரணம்"- அன்புமணி யாரை சாடினார்?

பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று (ஜுலை.16) சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி, " ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள். சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அதற்கெல்லாம் ... மேலும் பார்க்க

``இந்த இரண்டு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது!" - கடந்த காலத்தை நினைத்து வருந்தும் வைகோ

மறுமலர்ச்சி திமுகவின் அதிராரபூர்வ ஏடான ‘சங்கொலி’யின் முப்பதாவது ஆண்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது.வைகோ உரையாற்றவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அ... மேலும் பார்க்க

``எம்.பி-க்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?" - மாணிக்கம் தாகூர்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களவைச் செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அறிவுறுத்தல்களை வழங்கியிருக்க... மேலும் பார்க்க