செய்திகள் :

Sreenivasan: "ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்!" - மோகன்லால் உருக்கம்!

post image

mமலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு வயது 69.

நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவரின் மறைவுக்கு மலையாள திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் ஶ்ரீனிவாசன்
நடிகர் ஶ்ரீனிவாசன்

நடிகர் மோகன்லாலும் நடிகர் ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "ஸ்ரீனி திரும்பிச் சென்றுவிட்டார். ஸ்ரீனியுடனான ஆத்மார்த்தமான பிணைப்பை வார்த்தைகளில் அடக்க முடியாது. சினிமாவில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதைவிட மேலானது எங்கள் பிணைப்பு.

ஒவ்வொரு மலையாளிக்கும் ஸ்ரீனியுடன் இருந்த ஆத்மார்த்தமான தொடர்பும் அப்படித்தான் இருந்திருக்கும். மலையாளிகள் தங்களை ஸ்ரீனி உருவாக்கிய கதாபாத்திரங்களில் கண்டிருக்கிறார்கள்.

தங்களின் வலிகளையும் மகிழ்ச்சிகளையும் ஸ்ரீனி மூலமாக மக்கள் திரையில் கண்டார்கள். நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை வெளிப்படுத்த ஸ்ரீனியைப் போல வேறு யாரால் முடியும்?

Mohanlal
Mohanlal

நாங்கள் ஒன்றாக உருவாக்கிய கதாபாத்திரங்கள் என்றைக்கும் நிலைத்திருக்கும். ஸ்ரீனியின் எழுத்தில் மாயாஜாலம் இருக்கும். சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது அவரது படைப்புகள்.

வலியை சிரிப்பில் பதித்த பிரியமானவர். திரையிலும் வாழ்க்கையிலும் நாங்கள் தாசனையும் விஜயனையும் ('நாடோடிக்காற்று' என்ற மலையாளப் படத்தில் மோகன்லால் மற்றும் ஸ்ரீனிவாசனின் கதாபாத்திரங்களின் பெயர்கள்) போல சிரித்தும், ரசித்தும், சண்டையிட்டும், ஒற்றுமையாகவும் எப்போதும் பயணித்தோம்.

பிரியமான ஸ்ரீனியின் ஆத்மாவுக்கு சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

பன்முக கலைஞர்: திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், பிரபல நடிகர் ஶ்ரீனிவாசன் காலமானார்

மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீன... மேலும் பார்க்க

''அறியாமையில் செய்கிறார்கள்" - படங்களுக்கு அனுமதி மறுத்த மத்திய அமைச்சகம்; கண்டனம் தெரிவிக்கும் IFFK

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) குறிப்பிட்ட 14 படங்களை திரையிடுவதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம். இதனால் திரைப்பட இயக்குநர்களும், கேரள திரைப்பட விழாவின் ஒருங்கிணை... மேலும் பார்க்க

``நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்தேன்!" - நடிகர் திலீப் விடுதலையான வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017-ல் படப்பிடிப்பு முடித்து மாலை திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட சம்பவம் அப்போது அதிர்வலையை ஏற்படு... மேலும் பார்க்க

"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப்

'த்ரிஷ்யம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், " பாலிவுட் மட்ட... மேலும் பார்க்க

Mohan lal:``எங்கள் அன்பான லாலுவுக்கு" - வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி | வைரலாகும் வீடியோ

71-வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பைப் பாராட்டி, மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வழங்கப்பட்டது. இந்த வி... மேலும் பார்க்க