செய்திகள் :

விருதுநகர்: பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்; ஆசிரியைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

post image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஜெகஜீவன் ராம் தெருவில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதுடன் பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் அனைத்தையும் மாணவ மாணவியரை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வைக்க நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளியை சுத்தம் செய்யும் மாணவர்கள்

இதற்கு ஒரு படி மேலாக  இப்பள்ளியில் பணியாற்றும் லெட்சுமி என்ற ஆசிரியைக்கு சொந்தமான பேன்சி கடை, இப்பள்ளியின் அருகில் இயங்கி வருகிறது. அந்த கடையை திறப்பதே மாணவர்கள்தான் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேன்சி கடையை தினமும் காலையில் திறந்து சுத்தம் செய்வதுடன் ஆசிரியை விற்பனைக்கு வாங்கி வைத்துள்ள தின்பண்டங்களை பள்ளி இடைவெளி நேரங்களில் மாணவர்கள் மூலமாகவே விற்பனை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது.  

மேலும், அதே ஆசிரியை சாப்பிட்ட பாத்திரங்களை மாணவர்களே சுத்தம் செய்கின்றனராம். இப்படி அனைத்து நிலைகளிலும் பள்ளி மற்றும் ஆசிரியரின் தனிப்பட்ட இடங்களில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் மாணவ மாணவியர் பயன்படுத்த பள்ளி வளாகத்தில் கழிவறை வசதி இல்லாதது, பெற்றோரை கவலையடைய செய்துள்ளது.

கழிவறையை சுத்தம் செய்யும் மாணவிகள்

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரை: `காவல்துறையினர் கண்களைக் கட்டி, காலை அடித்து உடைத்தனர்!' - வெளியான ஆகாஷ் வாக்குமூலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி, மா... மேலும் பார்க்க

சிவகாசி: பள்ளி அருகே பட்டாசு ஆலைகள், கடைகளுக்கு அனுமதி; விபத்து அபாயத்தால் பயத்தில் பெற்றோர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உட்பட மாவட்டங்கள் முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதில், சிவகாசியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பட்டாசுக் கடைகள் உள்ளதாகக் கூறப்படு... மேலும் பார்க்க

பெங்களூரு: 'போலி CBI, 69 நாள் டிஜிட்டல் கைது' - 94 வயது முதியவர் ரூ.5 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

நாட்டில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் கும்பங்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சைபர் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு மாநிலமும் தனி சைபர் பிரிவு போலீஸ் படையை ... மேலும் பார்க்க

ஈரோடு: `பட்டியல் சாதியினருக்கு திருமண மண்டபம் தர மறுத்த விவகாரம்' - வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் டால்பின் என்ற பெயரில் தனியார் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் தன்னுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்காக அதே பெருந்துறையைச் சேர்ந்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: முதியவரைக் கொன்று மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ்

75 வயது முதியவரைக் கொடூரமாகக் கொலை செய்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொலைகாரனை கிருஷ்ணகிரி எஸ்.பி தலைமையில் 7 தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.Murderகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரு... மேலும் பார்க்க

நெல்லை: போதையில் தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் தாய் செய்த செயல்... விபரீதத்தில் முடிந்த சோகம்!

நெல்லையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தின் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி லதா. 56 வயதான அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி என்ற மகனும் உள்ளனர். மாயாண்டி மது போதைக்கு அடிமைய... மேலும் பார்க்க