செய்திகள் :

Hansika: 4 ஆண்டு திருமண வாழ்க்கை - விவாகரத்து பெற்ற ஹன்சிகா; ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை!

post image

கடந்த 2011ம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா.

தொடர்ந்து 'வேலாயுதம்', 'அரண்மனை', 'ரோமியோ ஜுலியட்', 'சிங்கம் 2', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட படங்களில் நடித்திருத்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா மோத்வானி

இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியா என்ற தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா-சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருக்கிறார்.

இதுதொடர்பான வழக்கில் ஹன்சிகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறும்போது, “திருமணத்துக்குப் பிறகு இரண்டு பேரும் சில காலம் தான் இணைந்து வாழ்ந்தனர்.

ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியா
ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியா

இருவரும் தங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு குணாதிசயங்கள், கருத்துகள், வாழ்க்கை முறையில் வேறுபாடுகள் இருப்பதை படிப்படியாக உணர்ந்தனர். அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியிருக்கிறது.

ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

தாய் கிழவி: "எங்க அப்பா இன்னும் சாகல.!"- மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கித்தில், ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘தாய் கிழவி’.இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக... மேலும் பார்க்க

Nagarjuna 100 : "இந்த படத்துக்கு என்னை தேர்வு பண்ணினதுக்குக் காரணம்.!" - இயக்குநர் ரா. கார்த்தி

நாகர்ஜுனாவின் 100-வது படத்தை 'நித்தம் ஒரு வானம்' இயக்குநர் ரா.கார்த்திக் இயக்குவதாக 'கூலி' படத்தின் ரிலீஸ் சமயத்தில் நாகர்ஜுனாவே ஒரு நிகழ்வில் அறிவித்திருந்தார். King 100 Pooja Stillஇயக்குநர் ரா. கார்... மேலும் பார்க்க

நடிகரும் இயக்குநருமான தக்காளி சீனிவாசன் காலமானார் - பெங்களூரு ஆசிரமத்தில் உயிர் பிரிந்தது!

நடிகர், வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல முகங்களாகப் பணிபுரிந்த 'தக்காளி' சீனிவாசன் நேற்று பெங்களூருவில் காலமானார். அவர் உடலடக்கம் இன்று நடக்கிறது.நடிகை சரணயா ... மேலும் பார்க்க

காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு: `அறை என்பது வலிதான், ஆனாலும்.!' - Lyricist முத்தமிழ் | வரித்துணையே 8

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க