"60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் மரபணு மதுரையில் கிடைக்கிறது" - அமர்நாத்...
T20 WC 2026 : "உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது.!"- மனம் திறந்த ரோஹித்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தொடக்க நாளில் அமெரிக்காவுடன் மோத உள்ளது.
இந்நிலையில் ட20 சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் ரோஹித் ஷர்மா வரும் டி20 உலகக்கோப்பையில் தான் விளையாட முடியாதது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், "2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன்.
இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது வித்தியாசமாக இருக்கும்.
எப்போதுமே உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். எனது கேப்டன்ஷிப்பில் பல முறை நடந்துள்ளது.
எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அந்த முடிவு (அணியில் நீக்கம்) ஏன் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வீரர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.
2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடரில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர் தேவை என கருதினோம்.
இதன் காரணமாக ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக தீபக் ஹூடாவை தேர்வு செய்தோம். எங்களைப் பொறுத்தவரை, அணியில் உள்ள 15 வீரர்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பது தான் முக்கியம்.
உலகக் கோப்பையை நோக்கிச் செல்லும்போது, அதை வெல்வதுதான் ஒரே குறிக்கோள். அதற்கு, உங்களுக்கு வெளிப்படையான உரையாடல்கள் தேவை" என்று ரோஹித் ஷர்மா பேசியிருக்கிறார்.


















