செய்திகள் :

TVK Vijay: `கரூர் சம்பவம் குறித்து எங்கள் புகார்களைக் கொடுத்திருக்கிறோம்' - சி.டி.ஆர்.நிர்மல் குமார்

post image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன் அங்கமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று மத்தியப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த விசாரணையில், 'கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் எனது கட்சியோ அல்லது அதன் நிர்வாகிகளோ பொறுப்பல்ல. மேலும், நான் அங்கேயே இருந்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என உணர்ந்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்' என விஜய் கூறியதாகத் தகவல் வெளியானது.

நிர்மல் குமார் - விஜய்
நிர்மல் குமார் - விஜய்

இந்த நிலையில், இன்று த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``எங்களுடைய தலைவருக்கு விட்னஸ் சமன் வந்திருந்தது. அதன் அடிப்படையில எங்களுடைய தலைவர் நேற்று டெல்லியில் சி.பி.ஐ அலவலத்தில் ஆஜராகி அவர்களுக்குத் தேவையான விளக்கத்தை அளித்தார்.

மேலும், இந்த வாரம் பொங்கல் நிகழ்ச்சி இருக்கிறது. ஜனநாயகன் படம் ரிலீஸ் சம்பந்தமாகவும் எங்களுடைய தலைவருக்குப் பல கூட்டங்கள் இருக்கிறது. அதனால், நாங்களே வேறு ஒரு தேதிக்கு விசாராணையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதன் அடிப்படையில் அடுத்த வாரம் வேறு ஒரு தேதியில் மீண்டும் ஒரு நாள் ஆஜராகி, தேவையான விளக்கத்தைத் தருவோம்.

கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை, காவல்துறையும், முதல்வருமே மாற்றிப் மாற்றி பேசுகிறார்கள் என்பதை பலமுறைச் சொல்லியிருக்கிறோம். சட்டமன்றத்தில் முதல்வர் 607 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகச் சொல்கிறார். காவல்துறை அதிகாரி டேவிட்சன் 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகச் சொல்கிறார். ஒரு சாதாரண விஷயத்திலேயே எவ்வளவு முரண்பாடுகள்.

சி.டி.ஆர் நிர்மல் குமார்
சி.டி.ஆர் நிர்மல் குமார்

இந்த விதத்தில் கரூர் சம்பவத்தில் நிறைய தவறுகள் நடந்திருக்கிறது. அது சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் கொடுத்திருந்தோம். கரூர் சம்பவத்தில் போஸ்ட்மார்ட்டம் செய்வதிலும் பல குளறுபடிகள் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் முன்தேதியிட்ட படிவங்களில் மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அது குறித்தும் சி.பி.ஐ-யிடம் நாங்கள் எங்களுடைய புகார்களைத் தெரிவித்துள்ளோம்.

எங்களுடைய தலைவருடைய கடைசி படம். நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, அது குறித்து விரிவாகப் பேசுவோம். படம் அமைதியான முறையில் வெளியாகி மக்களிடம் சென்று சேரவேண்டும். எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

தமிழில் பொங்கல் வாழ்த்து முதல் பழங்குடிகளுடன் நடனம் வரை... ராகுல் காந்தி கூடலூர் விசிட் க்ளிக்ஸ்!

கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவி... மேலும் பார்க்க

`பாண்டிச்சேரி மக்களின் குரலாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் ஒலிக்கும்' - பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா

பாண்டிச்சேரி ( pondichery ) யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று `நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின்' தலைவர் ( NMMK ) ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானம் நிற... மேலும் பார்க்க

Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்

தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது ... மேலும் பார்க்க

ஜனநாயகன்: `தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்' - ராகுல் காந்தி

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம் ... மேலும் பார்க்க

ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?

கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்தது. அப்போது ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.இதனால், கடந்த சில மாதங்களாக, ஈரான், அமெரிக்காவிற்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.இ... மேலும் பார்க்க

மும்பை தேர்தல்: திணறும் தாக்கரே சகோதரர்கள்; தாராவியைத் தக்கவைக்க தமிழ் வேட்பாளர்கள் தீவிரம்!

மும்பை மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி நடக்கும் தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பா.ஜ.க-சிவசேனா(ஷிண்டே) கூட்டணி தனியாகவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ்... மேலும் பார்க்க