செய்திகள் :

US: `டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடா?' - காவல்துறை சொல்வது என்ன?

post image

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் பகுதியில் உள்ளது டவுன் சென்டர் மால்.

இந்த மாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29-ம் தேதி) துப்பாக்கிச் சூடு நடந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

சிலர் முகநூல், எக்ஸ் தளம் போன்ற சமூக ஊடகங்களில், "எனது மருமகள் பணிபுரியும் போகா ரேடன் மாலில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்" என்றும்,

மற்றொருவர், "போகா ரேடன் மாலில் துப்பாக்கிச் சூடு, மக்கள் எல்லாத் திசைகளிலும் ஓடுகிறார்கள்" என்றும் பதிவிட்டிருந்தனர்.

டவுன் சென்டர் மால்
டவுன் சென்டர் மால்

உள்ளூர் ஊடக நிறுவனமான போகா நியூஸ் நவ், "டவுன் சென்டர் மாலில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது" என்று செய்தி வெளியிட்டது. இது தொடர்பாகத் தகவலறிந்த போகா ரேடன் காவல்துறையினரும் போகா ரேடன் தீயணைப்பு மீட்புக் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து, விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் முடிவில், "டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை, மாறாக அங்கே இருவருக்கு மத்தியில் வாக்குவாதம் மட்டுமே நடந்திருக்கிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்திருக்கிறார். தற்போது மாலுக்குள் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை" என்று காவல்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது.

மால் உரிமையாளர்களான சைமன் பிராப்பர்ட்டி குழுமம், "டவுன் சென்டர் மாலுக்குள் துப்பாக்கிகளை அனுமதிப்பதில்லை. என்றாலும் துப்பாக்கிச் சூடு குறித்த அச்சம் பரவியதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க

``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகு... மேலும் பார்க்க

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறி... மேலும் பார்க்க