செய்திகள் :

US: `டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடா?' - காவல்துறை சொல்வது என்ன?

post image

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் பகுதியில் உள்ளது டவுன் சென்டர் மால்.

இந்த மாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29-ம் தேதி) துப்பாக்கிச் சூடு நடந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

சிலர் முகநூல், எக்ஸ் தளம் போன்ற சமூக ஊடகங்களில், "எனது மருமகள் பணிபுரியும் போகா ரேடன் மாலில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்" என்றும்,

மற்றொருவர், "போகா ரேடன் மாலில் துப்பாக்கிச் சூடு, மக்கள் எல்லாத் திசைகளிலும் ஓடுகிறார்கள்" என்றும் பதிவிட்டிருந்தனர்.

டவுன் சென்டர் மால்
டவுன் சென்டர் மால்

உள்ளூர் ஊடக நிறுவனமான போகா நியூஸ் நவ், "டவுன் சென்டர் மாலில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது" என்று செய்தி வெளியிட்டது. இது தொடர்பாகத் தகவலறிந்த போகா ரேடன் காவல்துறையினரும் போகா ரேடன் தீயணைப்பு மீட்புக் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து, விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் முடிவில், "டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை, மாறாக அங்கே இருவருக்கு மத்தியில் வாக்குவாதம் மட்டுமே நடந்திருக்கிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்திருக்கிறார். தற்போது மாலுக்குள் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை" என்று காவல்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது.

மால் உரிமையாளர்களான சைமன் பிராப்பர்ட்டி குழுமம், "டவுன் சென்டர் மாலுக்குள் துப்பாக்கிகளை அனுமதிப்பதில்லை. என்றாலும் துப்பாக்கிச் சூடு குறித்த அச்சம் பரவியதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

தஞ்சாவூர்: ``திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை'' - போலீஸ் விசாரணை

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கிறார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி இவருடைய ... மேலும் பார்க்க

ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலன்; சடலத்துடன் திருமணம் செய்த காதலி - கலங்கிய கிராமம்

மகாராஷ்டிராவின் நான்டெட் பகுதியைச் சேர்ந்த சக்ஷம் டேட் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சல் என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆ... மேலும் பார்க்க

கோவை: 3 மணி நேரத்தில் 12 வீடுகளில் கொள்ளை; அடுக்குமாடி குடியிருப்பில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் வசித்து வருகிறார்கள். நேற்று அங்கு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 12 வீடுகளில் நகை, பணம் கொள்ள... மேலும் பார்க்க

நீட் தேர்வில் மோசடி: '6 மாநிலங்கள்; ரூ.100 கோடி' - ஆள்மாறாட்டம் செய்த பொறியாளர் சிக்கியது எப்படி?

சமீபத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக செய்திகள் வெளியாகின. இந்த மோசடி வடமாநிலங்களில் அதிக அளவில் நடக்கின்றன. அது போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் ம... மேலும் பார்க்க

சேலம்: மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்ய முயன்ற சிறை காவலர் அதிரடி கைது

சேலம் மத்திய சிறையில் காவலர் மூலமாக செல்போன்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கைதிகளை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.இ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: `பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை' - 6 பேருக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 43 வயது பெண் ஒருவர் 2022 ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்.திருமண நிகழ்ச்சி முடிந்து மாலையில் வி... மேலும் பார்க்க