செய்திகள் :

"அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது!" - கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்

post image

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், " நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார்.

செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்றார். டெல்லியில் இருந்தவர்கள் அவருடனும் பேசினார்கள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

செங்கோட்டையன் - டிடிவி தினகரன்

நான் டெல்லி சென்றபோது கூட 'செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றார். நம்முடன் வந்து இணைந்துகொள்ள சொல்லுங்கள்' என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

நான் இதை செங்கோட்டையனிடம் சொன்னேன். ஆனால் அவர் 'நான் ஏற்கனவே தவெகவில் இணைந்து விட்டேன். என்னால் மீண்டும் அங்கு வரமுடியாது' என்று சொன்னார்' மூத்த அரசியல்வாதியான அவரை வற்புறுத்துவதெல்லாம் சரியான விஷயம் கிடையாது" என்றிருக்கிறார்.

ஓபிஎஸ் திமுகவில் இணைகிறாரா?

தொடர்ந்து ஓபிஎஸ் திமுகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், " மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் எப்படி திமுகவிற்கு போவார். ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால் அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

கூட்டணி ஆட்சி

தவிர கூட்டணி ஆட்சி குறித்து பேசிய டிடிவி தினகரன் , " தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இருப்பதாகத் தான் அரசியல்வாதிகளும், மூத்த பத்திரிகையாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை மட்டுமே. நிபந்தனை எதுவும் நான் விதிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது" என்று பேசியிருக்கிறார்.

”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” - ஸ்டாலின்

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு' நடைபெற்றது. இதற்காக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மூவாயிரத்திற... மேலும் பார்க்க

மீண்டும் மொழியைக் கையிலெடுக்கும் திமுக - தேர்தலில் கைகொடுக்குமா?

தியாகிகள் தினம்!தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுகூரும் விதமாக ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று முந்தினம் செ... மேலும் பார்க்க

மகளிர் மாநாடு: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன"- உதயநிதி

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெற்றது.இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி உள்ள... மேலும் பார்க்க

"அமெரிக்கா செய்துவிட்டது; ஆனால், தென் கொரியா செய்யவில்லை" - ட்ரம்ப் வரியை உயர்த்த காரணம் என்ன?

தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.ஏன் இந்த உயர்வு? இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியு... மேலும் பார்க்க