செய்திகள் :

``ஆண்கள் அணைவரையும் சிறையில் அடைத்துவிடலாமா?" - விமர்சிக்கப்படும் நடிகை ரம்யாவின் பதிவு!

post image

நாய்கள் மீது அன்பு கொண்டவர்களும், நாய்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் என வாதிடுபவர்களும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.

அப்போது, ``சாலைகளில் நாய்கள் மற்றும் தெரு விலங்குகள் இல்லாமல் இருக்க வேண்டும். நாய் கடி மட்டுமல்ல, சாலைகளில் சுற்றித் திரியும் தெரு விலங்குகளும் ஆபத்தானவையாகவும் விபத்துக்களை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. எந்த நாய் எந்த மனநிலையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

நடிகை ரம்யா
நடிகை ரம்யா

தடுப்பு நடவடிக்கை எப்போதும் சிகிச்சையை விட சிறந்தது. மேலும், இந்த விஷயத்தில் இனி வாதிடுவதற்கு எதுவும் இல்லை. நீதிமன்றம் தெரு நாய்களை அகற்ற மட்டுமே உத்தரவிட்டுள்ளது. எந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளிலும் தலையிடவில்லை.

இந்த விஷயத்தில் மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் விதிகள், ஒழுங்குமுறைகள், வழிமுறைகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் நோக்கம்" எனக் கூறியது.

இந்த தீர்ப்பு குறித்து தன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் மக்களவை உறுப்பினரும், நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா (ரம்யா), ``ஒரு ஆணின் மனதையும் அறிந்துகொள்ள முடியாது. அவன் எப்போது பாலியல் வன்கொடுமை செய்வான், எப்போது கொலை செய்வான் என்று தெரியாது. அதனால் எல்லா ஆண்களையும் சிறையில் அடைத்துவிடலாமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நடிகை ரம்யாவின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

``ஸ்மார்ட் போன், ஆஃப் பேன்ட் அணியத் தடை; பைஜாமா அணிய வேண்டும்" - உ.பி கிராமங்களின் முடிவு!

ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்கள் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொ... மேலும் பார்க்க

``நாளையுடன் உலகம் அழியப்போகிறது" - தீவிரமாக கப்பல் கட்டும் எபோநோவா?: யார் இவர்? என்ன சொல்கிறார்?

இஸ்லாம் குர்ஆனிலும், கிறிஸ்தவம் பைபிலிலும் நூஹ் - நோவா என்பவரின் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது. உலகை அழிக்க நினைத்த இறைவன் இவர் மூலம் நல்லவர்களை காப்பாற்றி இந்த உலகை மீளுறுவாக்கம் செய்ததாக அந்த சம... மேலும் பார்க்க

"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு: தனி ஒருவனாக போராடி பலரை காப்பாற்றிய பழக்கடைகாரர் - யார் அந்த ஹீரோ?

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் அமைந்துள்ளது பான்டி (Bondi) கடற்கரை. யூதர்களின் விழாவான ஹனுக்காவை (Hanukkah) கொண்டாட பான்டி கடற்கரையில் சுமார் 1,000 முதல் 2,000 பேர் ... மேலும் பார்க்க

Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 'G.O.A.T. Tour' (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதா... மேலும் பார்க்க