செய்திகள் :

``இந்த நட்பு நாடுகள் மட்டும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம்" - ஈரான் பட்டியலில் இந்தியா?

post image

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. இதனால் ஏற்கனவே எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாலும், பல நாடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாலும், உலகளாவில் எரிசக்தி நெருக்கடி உருவாகும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச அமைதித் திட்டத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தது.

ஈரான் தாக்குதல்
ஈரான் தாக்குதல்

நேற்று நியூயார்க்கில் உள்ள ஈரானியத் தூதரகம், ஹார்முஸ் நீரிணை வழியாக பிற நாடுகளைச் சேர்ந்த அல்லது அவற்றுடன் தொடர்புடைய கப்பல்கள் உட்பட, 'பகைமை அற்ற கப்பல்கள்' அதாவது, அவை ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயல்களில் ஈடுபடாமலும், அத்தகைய செயல்களுக்கு ஆதரவளிக்காமலும் இருப்பதுடன், அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் காவல் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் கப்பல்கள், தகுந்த ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகக் கடந்து செல்லும் வசதியைப் பெறலாம்," என்று அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ``நடந்து வரும் ஈரான்-அமெரிக்கப் போருக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள வளைகுடாவின் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தியை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா மற்றும் ரஷ்யா போன்ற 'நட்பு நாடுகள்' பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது." எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், கடுமையான போருக்கு மத்தியில் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

டெல்லியில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டுக் கூட்டத்தில் பேசிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, ``இந்தியக் கொடியுடன் கூடிய இரண்டு எல்பிஜி கப்பல்களான பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகியவை ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்தியக் கப்பல்களும் மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ``உலகளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக அமைப்புகள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. ஹார்முஸ் நீரிணை நீண்ட காலமாக மூடப்பட்டிருப்பது, உலகளாவிய பயிர் சாகுபடிப் பருவத்தின் ஒரு மிக முக்கியமான தருணத்தில் எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் போக்குவரத்தை முடக்கி வருகிறது. பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவதுடன், ஆழ்ந்த பாதுகாப்பற்ற சூழலிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் போரின் விளைவுகளைக் குறைப்பதில் ஐ.நா. ஈடுபட்டு வருகிறது. அந்த விளைவுகளைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த வழி மிகவும் தெளிவானது. போரை - உடனடியாக - முடிவுக்குக் கொண்டுவருவதே ஆகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சர் சக்கரபாணியின் அண்டர் கிரவுண்ட் டீலிங்; தொகுதியை மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கு மெகா பிளான்!

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருப்பவர் சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கண்டோரேலில... மேலும் பார்க்க

'அஜித் பவார் இறந்தவுடன் கட்சியை கைப்பற்ற முயன்ற மாஜி மத்திய அமைச்சர்' - சரத் பவார் பேரன் பகீர்

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் புதிய துணை முத... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள்: ``புதருக்குள்ளேயுமா போலிஸ் லைட் போடமுடியும்?"- எஸ்.வி சேகர் சர்ச்சை பதில்

திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்டப் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். அப்போது, ... மேலும் பார்க்க

பாபநாசம் தொகுதி அமமுக-வுக்கு இல்லை; ரூட் போடும் வைத்தி! - திமுகவில் இணைகிறாரா டிடிவி விசுவாசி?

அமமுக-வின் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி. டி.டி.வி.தினகரனுக்கு அடுத்தபடியாக டெல்டா அமமுக-வின் முகமாக இருந்தவர். சசிகலாவின் நெருங்கிய உறவினர். அதிமுக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகி... மேலும் பார்க்க

பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட ஊட்டி; தலைமைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய அ.தி.மு.க நிர்வாகிகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல்களை அரசியல் இயக்கங்கள் வெளியிட்டு வருகின்றன. அ.தி.மு.க தரப்பில் களமிறங்கும் முக்கிய... மேலும் பார்க்க

``அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா... அந்த நோக்கமே இல்லை" - ஈரான் திட்டவட்டம்

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால் உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சில நாடுகள் அவசர நிலையை அறிவி... மேலும் பார்க்க