செய்திகள் :

அமைச்சர் சக்கரபாணியின் அண்டர் கிரவுண்ட் டீலிங்; தொகுதியை மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கு மெகா பிளான்!

post image

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருப்பவர் சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கண்டோரேலில் வைத்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் இவருக்கு எதிராக ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலைதான் இருக்கிறது. ஆனால் இந்த முறை தமிழ் மாநில காங்கிரஸிற்கு இந்தத் தொகுதியை ஒதுக்கியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, “ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த முறை சக்கரபாணியை எதிர்த்து அதிமுக சார்பில் என்.பி.நடராஜன் வேட்பாளராக நின்றார். அந்தத் தேர்தலில் கிட்டதட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் சக்கரபாணி வெற்றி பெற்றார்.

கனிமவளங்கள் எடுப்பது தொடர்பான விஷயங்களில் சக்கரபாணியின் பெயர் அடிபடுவதால் அவர்மீது தொகுதியில் அதிருப்தி நிலவுகிறது. இதனை அதிமுக பயன்படுத்தி கொண்டு நல்ல வேட்பாளரைக் களமிறக்கினால் அவருக்கு டஃப் கொடுக்கலாம்.

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி
அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி

ஆனால் இந்த முறை அதிமுக நேரடியாகக் களமிறங்கமல் தமிழ் மாநில காங்கிரஸிற்கு தொகுதியை ஒதுக்கியிருப்பது அதிமுகவினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பழனி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் கவுண்டர் சமூக வாக்குகள் அதிகம். அதனால் பழனியை தனி மாவட்டமாக்கி மேற்கு மாவட்டங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி நீண்டகாலமாகவே முயன்று வருகிறார்.

அதோடு அமைச்சர் ஐ.பெரியசாமியைத் தாண்டி தன்னால் ஆதிக்கம் செலுத்தமுடியவில்லை என்பதால் பழனியை தனி மாவட்டமாகப் பிரித்து தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டுமென கணக்கு போடுகிறார் அமைச்சர் சக்கராணி.

இந்த முறை அமைச்சர் சக்கரபாணி வெற்றி பெற்றால் ஒரே தொகுதியில் தோல்வியே பெறாமல் தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றவர் என்ற பெயர் கிடைக்கும். இதற்கு பரிசாக பழனியைத் தனி மாவட்டமாக்கி தன்னுடைய கட்டுபாட்டில் தர வேண்டுமென என தலைமையிடம் கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சக்கரபாணி
சக்கரபாணி

அதனால் இந்த முறை தன்னுடைய வெற்றிக்கு எந்தச் சிக்கலும் வரக்கூடாது என்பதாலேயே அதிமுக தரப்பில் தனக்கு நெருக்கமாக இருக்கும் மேற்கு மாவட்ட அதிமுக புள்ளியிடம் பேசி தொகுதியில் அதிமுக தரப்பில் வேட்பாளரை நிறுத்தாமல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி வைத்திருக்கலாம்” என்கின்றனர் விரிவாக.

ஸ்டாலின் Vs விஜய்... பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம் | ‘வாவ்’ வியூகம் 10

பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம்‘வாவ்’ வியூகம் 10வாக்காளர்கள் எதிர்பார்த்த ஜனநாயகத் திருவிழா தேதி அறிவிக்கப்படாகிவிட்டது. ஏப்.23-ல் தமிழகம் தேர்தலை சந்தித்துவிடும். தேர்தலும் பெண் வாக்காளர்களின் ப... மேலும் பார்க்க

"ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை" - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் தீயாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனமும், ஆளும் கட்சியின் பதிலும் எனச் சூடுபறக்கும் தமிழ்நாட்டு அரசியலில, திமுக கூட்டணிக் கட்சிகள் அவமானப்பட... மேலும் பார்க்க

'அஜித் பவார் இறந்தவுடன் கட்சியை கைப்பற்ற முயன்ற மாஜி மத்திய அமைச்சர்' - சரத் பவார் பேரன் பகீர்

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் புதிய துணை முத... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள்: ``புதருக்குள்ளேயுமா போலிஸ் லைட் போடமுடியும்?"- எஸ்.வி சேகர் சர்ச்சை பதில்

திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்டப் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். அப்போது, ... மேலும் பார்க்க

``இந்த நட்பு நாடுகள் மட்டும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம்" - ஈரான் பட்டியலில் இந்தியா?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. இதனால் ஏற்கனவே எண்ணெய் விலைகள் கடுமையாக உயர... மேலும் பார்க்க

பாபநாசம் தொகுதி அமமுக-வுக்கு இல்லை; ரூட் போடும் வைத்தி! - திமுகவில் இணைகிறாரா டிடிவி விசுவாசி?

அமமுக-வின் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி. டி.டி.வி.தினகரனுக்கு அடுத்தபடியாக டெல்டா அமமுக-வின் முகமாக இருந்தவர். சசிகலாவின் நெருங்கிய உறவினர். அதிமுக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகி... மேலும் பார்க்க