செய்திகள் :

இறுதி ஒப்புதலுக்கு Waiting; கிடைத்துவிட்டால் இந்தியாமீது அமெரிக்காவின் 100% வரி பாயும்! விவரம் என்ன?

post image

அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று முன்பு கூறினார்.

அவரும் அதிபரானதிலிருந்து எத்தனையோ முயற்சிகள் செய்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை.

இதனால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரிகளை விதித்து ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுத்தது அமெரிக்கா.

அப்போதும் ரஷ்யா வழிக்கு வரவில்லை.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

லிண்ட்சி ஓ.கிரஹாம் சட்டம்

ரஷ்யாவிற்கு இன்னும் நெருக்கடியைக் கூட்ட, லிண்ட்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம் 2026 அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.

இந்தச் சட்டத்தின் மூலம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

இந்தச் சட்டத்தின் வளையத்திற்குள் முக்கியமாக சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் சிக்கும்.

இந்தச் சட்டம் ஈரானுடன் வர்த்தகம் செய்பவர்கள் மீதும் பாயும்.

Waiting..!

நேற்று இந்தச் சட்டம் அமெரிக்காவின் கீழ்சபையில் கொண்டுவரப்பட்டது. அங்கே இது 214–211 என்று ஒப்புதல் பெற்றது. இந்த ஒப்புதலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இருவரும் சாதகமாக வாக்களித்துள்ளனர்.

நாளை இந்தச் சட்டம் இறுதி ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது. அங்கேயும் ஒப்புதல் பெற்றுவிட்டால், இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிடும்.

அமலுக்கு வந்தால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

இது நடக்குமா... இதை இந்தியா எப்படி சமாளிக்குமோ?!

'வாயை விட்ட மூசா;கடுப்பில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்?'- லண்டன் ரசிகர் சந்திப்பு ரத்து பின்னணி

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரசிகர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரை ... மேலும் பார்க்க

`அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம்; விரக்தியில் இலாயக்கற்ற அரசு...' - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீடுகளில் இன்று காலை முதல் ... மேலும் பார்க்க

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.! காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன் கைது

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்குமிடையே பேஸ்புக் மூலமாக பழக்கமாகி நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. இதையடுத்து காதலியை நேரில் சந்திப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆ... மேலும் பார்க்க

"அரசுப் பணத்தில் அமெரிக்கா செல்லவில்லை" - சிகாகோவிலிருந்து விளக்கம் அளித்த கேரள அமைச்சர்!

கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில், ரமேஷ் சென்னித்தலாவுடன் இருக்கும் புகைப்படங்களை அங்குள்ள வெளிநாடு வாழ் கேரளத்தவர்களும், கேரள எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

`மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் அரசியல்' - அறங்காவலர் குழு தலைவர் ருக்மிணி பழனிவேல்ராஜன்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் சுப்புலெட்சுமி, டாக்டர்.ச... மேலும் பார்க்க