செய்திகள் :

விநாயகருக்கு ஆரத்தி தட்டை மாற்றி சுற்றிய சல்மான்கான்; சரி செய்த சகோதரி அர்பிதா - பெண் தோழி பங்கேற்பு

post image

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பாலிவுட் பிரபலங்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். நடிகர் சல்மான் கான் சகோதரி அர்பிதா தனது வீட்டில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளார். இதில் சல்மான் கான் கலந்து கொண்டு வழிபட்டார்.

சல்மான் கான் பல ஆண்டுகளாகவே விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆரத்தி மற்றும் சிலை கரைப்பு உள்ளிட்ட கொண்டாட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டு சல்மான் கான் தனது சகோதரி வீட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகருக்கு ஆரத்தி தட்டில் ஆரத்தி எடுத்தார். அவர் ஆரத்தி தட்டை வலதுபுறமாக சுற்றுவதற்கு பதில் இடதுபுறமாக சுற்றினார்.

இதனை கவனித்த அர்பிதா தனது சகோதரனிடம் வலதுபுறமாக ஆரத்தி தட்டை சுற்றும்படி கேட்டுக்கொண்டார். உடனே தனது தவறை தெரிந்து கொண்ட சல்மான் கான் ஆரத்தி தட்டை வலது பக்கமாக சுற்றினார்.

விநாயகரை தரிசிக்க ​​சல்மான் கருப்பு நிற டி-ஷர்ட், கருப்பு நிறத் தலைக்கவசம் மற்றும் கையில்லாத சாம்பல் நிற ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்து சாதாரணமான தோற்றத்தில் வந்திருந்தார். அதேசமயம் அர்பிதா பூ வேலைப்பாடுகளுடன் கூடிய பச்சை மற்றும் கருப்பு நிறத்திலான பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.

இவ்விழாவில் சல்மான் கானின் நெருங்கிய தோழியான யூலியா வான்டரும் கணபதி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். அவர் சல்மான் கான் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆரத்தி எடுத்து வழிபட்டார். பல ஆண்டுகளாகவே சல்மானின் குடும்பக் நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களில் யூலியா தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

சல்மானின் தாயாரான சல்மா கான், ஒரு மகாராஷ்டிர இந்து குடும்பத்தில் சுஷீலா சரக் என்ற பெயரில் பிறந்தவர். அதேவேளையில், அவரது தந்தையான சலீம் கான் ஒரு முஸ்லிம் ஆவார். பல்வேறு மத மரபுகளைச் சார்ந்த பண்டிகைகளைக் கொண்டாடும் குடும்பமாக இவர்கள் நீண்ட காலமாக அறியப்படுகிறார்கள்.!

Donald Trump நடாலி ஹார்ப்பை முத்தமிட்டாரா? - வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி!

“ட்ரம்ப், நடாலி ஹார்ப்பை முத்தமிடுகிறார்...” – இந்தப் புகைப்படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் Donald Trump, அவருடைய Executive Assistant நடாலி ஹார்ப்பை கோல்ஃப் மைதானத... மேலும் பார்க்க

ஆதரவாளர்களுடன் மும்பை நோக்கி பேரணி; மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் மனோஜ் ஜராங்கே!

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜல்னாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். மராத்தா மக்களுக்கு சாதிச்சான்று விரைந்து வழங்க வேண்டும் என... மேலும் பார்க்க

`நண்பர்' பிரதமர் மோடியிடம் முறையிட்ட முதியவர்; அபகரித்த நிலத்தை திரும்பக் கொடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ!

மும்பை பயந்தர் பகுதியைச் சேர்ந்த அஸ்கர் அலி வோரா என்பவர் தனது நிலத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவும், வேறு ஒரு கட்டுமான நிறுவனமும் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அந்த நிலத்தை தான் 1989ம் ஆண்டு விலை... மேலும் பார்க்க

நெல்லை: அரசு திட்டங்கள்... அசுர தாலாட்டு... பிரமாண்ட ராட்டினம்- மக்களை ஈர்க்கும் பொருட்காட்சி! Album

திருநெல்வேலி: தமிழக அரசு திட்டங்கள்!பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களை கவரும் அரசுப் பொருட்காட்சி.! மேலும் பார்க்க

ரூ.3,383 கோடிக்கு சொத்து இருந்தும் மும்பை பா.ஜ.க எம்.எல்.ஏ. தெருக்களில் யாசகம் கேட்டு சென்றது ஏன்?

மும்பை காட்கோபர் கிழக்கு பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பராக் ஷா. மகாராஷ்டிராவில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக கருதப்படும் பராக் ஷாவிற்கு ரூ.3,383 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. ஏராளமான... மேலும் பார்க்க

"அந்த இடத்திலேயே இறந்திருப்பேன்" - இடித்து விட்டு தப்பியதாக கார் டிரைவர் மீது டெல்லி பெண் புகார்

டெல்லி அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காரில் வந்த ஒருவர் விரட்டி சென்றார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வாகனத்தை காரில் வந்தவர் குறுக்கிட்டார். இதனால் அப்பெ... மேலும் பார்க்க