செய்திகள் :

உணர்வுப்பூர்வ சந்திப்பு: மும்பையில் வழித் தவறிய தாய் - 12 ஆண்டுகளுக்குப்பின் சேர்ந்து வைத்த போலீஸ்

post image

மும்பையில் ஏராளமானோர் யாசகம் பெற்று வாழ்கின்றனர். அவர்களில் பலர் தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்தவர்களாகவோ அல்லது உறவுகள் அற்றவர்களாகவோ இருக்கின்றனர். அவ்வாறு மும்பையில் யாசகம் பெறுபவர்களை மீட்டு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மும்பை பைகுலாவில் உள்ள ஜெ.ஜெ.மார்க் சந்திப்பில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் சரியாக உடைகூட அணியாமல் பசியுடன் யாசகம் எடுத்துக்கொண்டிருந்தார். அவரை போலீஸார் அழைத்து சென்று குளிக்க வைத்து வேறு ஆடை கொடுத்து சாப்பாடு வாங்கி கொடுத்தனர்.

அப்பெண் தனது நினைவுகளை இழந்திருந்தார். அவரது உறவினர்கள் அல்லது சொந்த ஊர் குறித்து எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. கோதாவரி என்ற பெயர் மட்டும் அவருக்கு நினைவில் இருந்தது. அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அவரை செம்பூரில் உள்ள முகாமில் சேர்த்தனர். அங்கு இருந்தவர்கள் அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்தனர். இதில் அப்பெண் ஷெலு என்ற ஒரு வார்த்தையை மட்டும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். ஷெலு என்பது மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

குடும்பத்தோடு சேர்த்து வைத்தபோலீஸார்

மும்பை போலீஸார் உடனே ஷெலு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதோடு அப்பெண்ணின் புகைப்படத்தையும் அப்போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஷெலு போலீஸார் 12 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை ஆய்வு செய்து வைசாலி என்ற பெண் காணாமல் போனதாக புகார் பதிவாகி இருப்பதை உறுதி செய்தனர். ஷெலு போலீஸார் உடனே புகார் கொடுத்தவர்களை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். அவர்கள் வந்து அப்பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அது அவர்களின் தாயார் என்பதை உறுதி செய்தனர். வைசாலி 12 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வந்தபோது வழி தவறி சென்றுள்ளார்.

அதன் பிறகு அவரால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. தனது தாயார் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரது இளைய மகன் கிஷோர் தனது தாயாருக்காக எடுத்து வைத்திருந்த சேலை மற்றும் உணவு எடுத்துக்கொண்டு மும்பைக்கு வந்தார். வைசாலிக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பெரியவர்களாகிவிட்டனர். போலீஸார் வைசாலியை அவரது மகன்களோடு சேர்த்து வைத்தபோது அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். இச்சந்திப்பு உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தது. அப்பெண்ணை அவரது மகன்களுடன் சேர்த்து வைத்த போலீஸாரை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

`3 பங்களா, 3 ஆட்டோ, கார், கந்துவட்டி' - இந்தூரில் யாசகம் எடுத்து ராஜவாழ்க்கை வாழ்ந்த மாற்றுத்திறனாளி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் யாசகம் எடுத்து வாழ்ப்வர்களுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து நகர் முழுவதும் யாசகம் எடுப்பவர்களை பிடித்து சென்று முகாம்களில் அடைத்தது. அங்க... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதானவர்களை வேட்பாளர்களாக்கிய அஜித்பவார்; சிறையிலிருந்தே வென்ற பெண்கள்; பின்னணி என்ன?

புனே மாநகராட்சித் தேர்தலில் கேங்க்ஸ்டர் பாண்டு ஆண்டேகரின் உறவுக்கார மகளிர் சிறையில் இருந்து கொண்டே போட்டியிட்டனர்.பாண்டு ஆண்டேகரின் மருமகள் சோனாலி மற்றும் மைத்துனி லட்சுமி ஆகியோர் கொலை வழக்கில் சிறையி... மேலும் பார்க்க

41 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்டவர்; அம்மாவை தேடி நாக்பூர் வந்துள்ள நெதர்லாந்து மேயர்!

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹீம்ஸ்டேட் என்ற நகரத்தில் மேயராக இருப்பவர் பால்குன் பின்னன்டைக். கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு பால்குன் திருமணமாகாத பெண் ஒருவருக்கு நாக்பூரில் பிறந்தார். அவர் பிறந்த 3 நாட்களி... மேலும் பார்க்க

பொங்கல் தினத்தில் மாநகராட்சி தேர்தல்: மும்பை தாராவியில் பொங்கல் விழாவை ரத்து செய்த தமிழ் அமைப்புகள்!

மும்பை தாராவியில் ஒவ்வோர் ஆண்டும் 90 அடி சாலையில் 2000 பெண்கள் கூடி ஒரே இடத்தில் பொங்கலிடுவது வழக்கம். இந்து அமைப்புகள், தமிழ் சங்கங்கள், அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த பொங்கல் விழாவை நடத்துவது வழக்கம... மேலும் பார்க்க

45 சவரன் தங்க நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்; நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி உரிமையாளர்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான திருமதி பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்ததற்காக, லலிதா ஜுவல்லரி உரிமையாளர் டாக்... மேலும் பார்க்க