செய்திகள் :

'எங்களுக்காக கோர்ட்ல கேஸ் நடத்துனதே முதல்வர் விஜய்தான்!' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு மக்கள்

post image

பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. முதல்வர் ஆவதற்கு முன்பு பிரசாரத்தின் போது தனது முதல் மக்கள் சந்திப்பை விஜய் ஏகனாபுரத்திலேயே நடத்தியிருந்தார். அப்படியிருக்க, விஜய் முதல்வர் ஆகியிருக்கும் நிலையில் பரந்தூர் மக்கள் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

பரந்தூர்
பரந்தூர்

இதுதொடர்பாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலாளர் கதிரேசனிடம் பேசினோம். அவர் கூறுகையில், 'முதல்வர் விஜய் மக்களை சந்திக்கும் அரசியல் பயணத்தையே எங்கள் ஊரில்தான் தொடங்கியிருந்தார். அப்போது, 'விமான நிலையம் வேணாம்னு சொல்லல, விளைநிலங்கள் நிறைஞ்சிருக்க இந்த பரந்தூர், ஏகனாபுரத்துலதான் வேணாம்னு சொல்றேன்.

தவெக ஆட்சி அமைந்த உடனே இந்தத் திட்டம் கைவிடப்படும்' எனப் பேசியிருந்தார். தவெக தலைவராக விஜய் வந்து எங்கள் ஊரில் பேசிய பிறகுதான் பரந்தூர் விமான நிலைய விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. ஊருக்கு வந்து ஒரு பேச்சுக்கு ஆதரவு கொடுத்தோம் என்று மட்டுமில்லாமல், ராகவாச்சாரி என்கிற சீனியர் வக்கீலை நியமித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடவும் முழு உதவியையும் செய்தார். வழக்கு சம்பந்தமாக நாங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. மக்கள் அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால்தான் எங்களின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக தவெகவுக்கு துணையாக நின்று பிரசாரமும் செய்தோம்.

Vijay
Vijay

பரந்தூர், ஏகனாபுரம் மக்களின் வாக்கெல்லாமே விசில் சின்னத்திற்குதான் விழுந்திருக்கிறது. சமீபத்தில் தவெகவின் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களை சந்தித்தோம். 'நீங்க 4 வருசமா அலைஞ்சிட்டீங்க. இனியும் அலைஞ்சி திரிஞ்சு கஷ்டப்படாதீங்க. உங்க போராட்டம் வெற்றியடையப் போற நாள் வந்துருச்சு. இது உங்க அரசாங்கம். உங்க விருப்பத்துக்கு மாறா எதுவும் நடக்காது' என நம்பிக்கை கூறினார். முதல்வர் மீது நாங்கள் பெரிய மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கிறோம். இந்தத் விமான நிலைய திட்டத்தை முழுமையாக கைவிடும் அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என நம்புகிறோம். அவர் வென்றிருப்பதை கொண்டாடும் விதமாக. எங்களின் காவல் தெய்வங்களாக நிற்கும் எல்லையம்மன் மற்றும் கொல்லமேட்டாளம்மன் கோவிலின் ஆடி மாதத்தில் முதல்வருக்கென சிறப்பு பூஜை செய்யவிருக்கிறோம்' என்றார்.

Nigeria: ``ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் முக்கிய தளபதியை வீழ்த்திவிட்டோம்" - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலில், ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்... மேலும் பார்க்க

“அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்த முதல்வர்” - பதவியேற்பு விழா எப்போது?

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதல்வருடன் அமைச்சர்களாக பதவியேற்ற ஒன்பது பேருக்குமான துறைகள் ஒதிக்கீடும் அப்போத... மேலும் பார்க்க

"வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யூ வார்டுகூட இல்லை என்பது வேதனை!" - ஸ்ரீரங்கம் த.வெ.க எம்.எல்.ஏ

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், தரம் உயர்த்துவது குறி... மேலும் பார்க்க

Pawan Kalyan: "விஜய்யுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்" - தொண்டர்களுக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்

தமிழ்நாட்டின் முதல்வராக, நடிகர் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அவரை ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் ஒப்பிட்... மேலும் பார்க்க

`பாஜக-வின் சர்க்கஸ் யானைபோல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்'- திண்டுக்கல் ஐ.லியோனி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.இதில் ... மேலும் பார்க்க

காங்கிரஸ்: ``அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா?" - `NO' சொல்லும் கார்த்தி சிதம்பரம்; காரணம் என்ன?

தவெக ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.க-வில் இப்போது நடந்துவரும் உட்கட்சிப் பூசலெல்லாம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான செய்தியாக வலம் வருகின்றன. இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்... மேலும் பார்க்க