செய்திகள் :

'என் மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா?' - எடப்பாடி பழனிசாமியின் விளக்கம் என்ன?

post image

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது.

இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள் என்பதால், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இரண்டு நாள்கள் பயிற்சி முகாமை முடித்துவிட்டு, இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்கள்.

தவெக - சட்டபேரவை கூட்டத் தொடர்
தவெக - சட்டபேரவை கூட்டத் தொடர்

இன்றைய அமர்வு முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "என்னுடைய மகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும்தான் இருக்கிறார். அவர் அரசியலுக்குள் வரமாட்டார்" எனத் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

அவருடைய மகன் மிதுன் குமார் அதிமுக-வில் முக்கியப் பொறுப்பிற்கு வருகிறார் எனத் தகவல்கள் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இதற்கு அவர் விளக்கமளித்திருக்கிறார்.

அவர், "இன்று நேற்று மட்டுமில்லை, தலைவர் காலத்திலும், அம்மா காலத்திலும் சோதனையைப் பார்த்திருக்கிறோம். வெற்றி வாய்ப்பு, வெற்றி வாய்ப்பு இழப்பு மாறி மாறித்தான் இருக்கும்.

எங்களுடைய தலைவர்கள் இல்லாத சமயத்திலும் தேர்தலைச் சந்தித்து, 2021-ல் 66 இடங்களில் வெற்றி பெற்றோம். எனக்கு முன்பு பலரும் பழனிசாமி தொடர் தோல்வியைக் கண்டார் என்றார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் நான்தான் வென்றிருக்கிறேன். அரசியல் சூழல் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயல்பு" என்றவர், "என்னுடைய மகன் மிதன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

ஆளுநர் உரை: ``எல்லாம் ரீல்ஸ்க்கான கண்டென்ட்; வாயைத் திறங்க CM சார்..!" - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர், மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், 2-வது தேசிய கீதம் பா... மேலும் பார்க்க

தவெக எதிர்ப்பு: ``இதைக் கடந்த ஆட்சியில் செய்திருக்கணும்"- விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது விவாதமானது. அதுதவிர, எதிர்க்கட்சித் தலைவர் ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்! - அதிமுக-வில் ஓயாத சலசலப்பு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும... மேலும் பார்க்க

'திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' - தி.மு.க வேட்பாளர் வழக்கு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சி ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளி... மேலும் பார்க்க

Vijay: ``இதைத் தாண்டி தவெக-வால் செல்ல முடியாது என்பது நிரூபணமாகிறது" - தமிமுன் அன்சாரி

மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, இன்று சட்டமன்றக் கூட்டத்தின் ஆளுநர் உரை முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத்த... மேலும் பார்க்க

``முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து ஆளுநர் உரை இல்லை" - பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 2-வது தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்ற... மேலும் பார்க்க