அரசன்: மிரட்டலான மூன்றாவது கெட்டப்; வெற்றிமாறன் குட்புக்கில் இடம்பிடித்த சிலம்பர...
'என் மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா?' - எடப்பாடி பழனிசாமியின் விளக்கம் என்ன?
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள் என்பதால், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இரண்டு நாள்கள் பயிற்சி முகாமை முடித்துவிட்டு, இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்கள்.

இன்றைய அமர்வு முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "என்னுடைய மகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும்தான் இருக்கிறார். அவர் அரசியலுக்குள் வரமாட்டார்" எனத் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
அவருடைய மகன் மிதுன் குமார் அதிமுக-வில் முக்கியப் பொறுப்பிற்கு வருகிறார் எனத் தகவல்கள் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இதற்கு அவர் விளக்கமளித்திருக்கிறார்.
அவர், "இன்று நேற்று மட்டுமில்லை, தலைவர் காலத்திலும், அம்மா காலத்திலும் சோதனையைப் பார்த்திருக்கிறோம். வெற்றி வாய்ப்பு, வெற்றி வாய்ப்பு இழப்பு மாறி மாறித்தான் இருக்கும்.
எங்களுடைய தலைவர்கள் இல்லாத சமயத்திலும் தேர்தலைச் சந்தித்து, 2021-ல் 66 இடங்களில் வெற்றி பெற்றோம். எனக்கு முன்பு பலரும் பழனிசாமி தொடர் தோல்வியைக் கண்டார் என்றார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.
தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் நான்தான் வென்றிருக்கிறேன். அரசியல் சூழல் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயல்பு" என்றவர், "என்னுடைய மகன் மிதன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை" எனக் கூறியிருக்கிறார்.














