செய்திகள் :

``முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து ஆளுநர் உரை இல்லை" - பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 2-வது தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரை முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், ``இன்றைக்கு சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை முழுவதும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலுமே அமைந்திருந்தது.

ஆளுநர் அர்லேகர்
ஆளுநர் அர்லேகர்

தற்போதைய சூழலில் மாநிலத்தில் நடந்து வரும் முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து அதில் இல்லை. கடந்த ஆட்சியின் திட்டங்கள் குறித்து ஆளுநரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் முழுக்க முழுக்க ஆட்சியாளர்களுக்குத் தகுந்தாற்போலவே வடிவமைக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதையும், இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதையும் நாங்கள் வரவேற்கிறோம்; அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த உரை ஆளும் தரப்பிற்கு மட்டுமே ஆதரவான ஒரு உரையாக மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆளுநர் உரையின் பிற அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசுக்கு எதிராக அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்தும் தே.மு.தி.க-வின் விரிவான அவதானிப்புகளையும், கருத்துகளையும் நாளை செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாகவும் விளக்கமாகவும் வெளியிடுவேன்" என்றார்.

ஆளுநர் உரை: ``எல்லாம் ரீல்ஸ்க்கான கண்டென்ட்; வாயைத் திறங்க CM சார்..!" - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர், மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், 2-வது தேசிய கீதம் பா... மேலும் பார்க்க

தவெக எதிர்ப்பு: ``இதைக் கடந்த ஆட்சியில் செய்திருக்கணும்"- விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது விவாதமானது. அதுதவிர, எதிர்க்கட்சித் தலைவர் ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்! - அதிமுக-வில் ஓயாத சலசலப்பு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும... மேலும் பார்க்க

'திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' - தி.மு.க வேட்பாளர் வழக்கு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சி ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளி... மேலும் பார்க்க

Vijay: ``இதைத் தாண்டி தவெக-வால் செல்ல முடியாது என்பது நிரூபணமாகிறது" - தமிமுன் அன்சாரி

மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, இன்று சட்டமன்றக் கூட்டத்தின் ஆளுநர் உரை முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத்த... மேலும் பார்க்க

'என் மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா?' - எடப்பாடி பழனிசாமியின் விளக்கம் என்ன?

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது.இத்தேர்தலில் வெற்... மேலும் பார்க்க