செய்திகள் :

சி.வி.சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்! - அதிமுக-வில் ஓயாத சலசலப்பு

post image

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருவது கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அவை நடவடிக்கைகளில் சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை. அதேபோல், சட்டப்பேரவைக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமியுடன் காணப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி
எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி

பொதுவாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வரும்போதும், செய்தியாளர்களை சந்திக்கும்போதும் எஸ்.பி.வேலுமணி உடனிருப்பார். ஆனால் இன்று அது மாதிரியான காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கும் அவர் செல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவை நடவடிக்கைகள் முடிந்த உடனேயே எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம் | அதிமுக

இந்த ஆலோசனையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அருள்மொழிதேவன், திருத்தணி ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாவட்டச் செயலாளர்களாக இருந்த நிலையில், அவர்களிடமிருந்து அந்த பொறுப்புகள் பறிக்கப்பட்டு இதுவரை மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து சி.வி.சண்முகம் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துவரும் சூழலில், அவரது அலுவலகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனைகள் அதிமுக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

குறிப்பாக, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் உள்கட்சி பிரச்சனை குறித்து பல்வேறு கேள்விகளை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.!

'இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு' ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

நேற்று தான் ஈரான், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்குள் இன்று உக்ரைன் ரஷ்யா மீது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் செய்த... மேலும் பார்க்க

`3 ஆண்டுகளுக்குப் பிறகு... சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள்!' - ஆளுநர் ஆரலேகர் பெருமிதம்

முந்தைய ஆட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக- அரசுக்கும் இடையே இருந்த அதிருப்தி சூழல்களால், 'ஆளுநர் உரை' என்றாலே தமிழ்நாடு அரசியல் களம் உன்னிப்பாக கவனிக்கும். இந்த சூழலில் இன்று மாநிலப் பொறுப்பு ஆ... மேலும் பார்க்க

ஆளுநர் உரை: ``எல்லாம் ரீல்ஸ்க்கான கண்டென்ட்; வாயைத் திறங்க CM சார்..!" - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர், மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், 2-வது தேசிய கீதம் பா... மேலும் பார்க்க

தவெக எதிர்ப்பு: ``இதைக் கடந்த ஆட்சியில் செய்திருக்கணும்"- விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது விவாதமானது. அதுதவிர, எதிர்க்கட்சித் தலைவர் ... மேலும் பார்க்க

'திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' - தி.மு.க வேட்பாளர் வழக்கு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சி ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளி... மேலும் பார்க்க

Vijay: ``இதைத் தாண்டி தவெக-வால் செல்ல முடியாது என்பது நிரூபணமாகிறது" - தமிமுன் அன்சாரி

மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, இன்று சட்டமன்றக் கூட்டத்தின் ஆளுநர் உரை முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத்த... மேலும் பார்க்க