செய்திகள் :

திருச்சி: மது அருந்த பணம் தராத மனைவி; குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்!

post image

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 45). இவர், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சின்னம்மாள் (வயது:42) . இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் குடிப்பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால், வீட்டில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், வேலைக்கு சென்று விட்டு குடிப்பதற்கு பணம் இல்லாததால் தன் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால், அவர் மது அருந்துவதற்கு பணம் கொடுப்பதற்கு மனைவி தர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகில் இருந்த குக்கரின் மூடியால் தனது மனைவி சின்னம்மாளின் தலையில் தாக்கியுள்ளார்.

trichy

குக்கர் மூடியில் தாக்கியதால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் சின்னம்மாள். இச்சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜீயபுரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீஸார் விசாரணை செய்தனர். இறந்த சின்னமாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மது அருந்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் கணவர் அடித்து கொலை செய்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: 'மாணவர்களுக்கு இடைஞ்சல்; பெண்களுக்குப் பயம்' - டாஸ்மாக் பாரை மூட கோரி போராட்டம்

திருச்சி மாநகரம், டி.வி.எஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறு ஏற்படுவதாகவும் குறிப்பாக போ... மேலும் பார்க்க

திருவாரூர்: தனியாக நின்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் ஈவ் டீசிங்; தவெக நிர்வாகி கைது

தவெக-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24). இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இள... மேலும் பார்க்க

திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. திரு... மேலும் பார்க்க

அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி; தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரைத் தாக்கிய புதிய தமிழகம் நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோயிலில்திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின்போது காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாட... மேலும் பார்க்க

சூலூர் சிறுமி பாலியல் கொடுமை வழக்கு: 2வது குற்றவாளியிடம் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்மீது புகார்!

தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி தனலட்சுமி. பெருமாள் மனைவி கிருஷ்ணம்மாள். இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் இன்று புகார்... மேலும் பார்க்க

கோவை: கிணற்றில் வீசிய துர்நாற்றம்; சாக்குப்பையிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்... மேலும் பார்க்க