செய்திகள் :

`பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த கேரளம் முடிவு' - சிபிஎம்-ஐ விமர்சித்த வி.டி.சதீசன்

post image

கேரளாவில் கடந்த முறை ஆட்சி செய்த எல்.டி.எஃப் அரசு ஏற்கெனவே மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பி.எம்-ஸ்ரீ கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்று கேரள காங்கிரஸ் முதலமைச்சர் வி.டி.சதீசன் தலைமையிலான தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே விடுவித்த ரூ.99 கோடி மற்றும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.106 கோடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இரண்டு முக்கிய நிபந்தனைகளை அரசு முன்வைத்துள்ளது. ​இந்த நிபந்தனைகள் குறித்து முதலமைச்சர் வி.டி.சதீசன் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், "பள்ளிகளின் பாடத்திட்டத்தைத் தீர்மானிப்பதில் மாநில அரசின் சுதந்திரத்தில் மத்திய அரசு எவ்விதத்திலும் தலையிடக் கூடாது. அதேபோல், பி.எம்-ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை அமல்படுத்துவோம். மதவாத அஜெண்டாக்களுக்குப் பணியாமல், மாநிலத்தின் கல்வி சுதந்திரத்தை உறுதி செய்த பிறகே இதை முன்னெடுப்போம். மத்திய அரசு நிபந்தனைகளை ஏற்கவில்லை எனில், அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

முதல்வராகும் வி.டி.சதீசன் பினராயி விஜயனுடன்

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை ஆய்வு செய்யவும், அரசின் கொள்கை முடிவுகளை மத்திய அரசுக்குத் தெரிவிக்கவும் அமைச்சரவை துணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அமைச்சர் என்.சம்சுதீன் ஒருங்கிணைப்பாளராகவும், அமைச்சர்கள் ரோசி எம்.ஜான், பி.சி.விஷ்ணுநாத், எம்.லிஜு ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

​எல்.டி.எஃப் அரசு பதவிக்காலத்திலேயே இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், கேரளம் இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகிவிட்டது என்று குறிப்பிட்ட வி.டி.சதீசன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலமாகவே சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.99 கோடிக்கும் அதிகமான நிதியை அரசு பெற்றுள்ளதாகவும், தற்போது கூடுதலாக ரூ.106 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க அல்லாத ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பாதிக்காத வகையில் கூட்டாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய பினராயி விஜயன் அரசின் செயல்பாடுகளை விமர்சித்த முதலமைச்சர் வி.டி.சதீசன், ``இத்திட்டத்தில் கையெழுத்திட மாட்டோம் என்று எல்.டி.எஃப் அரசு கூறி வந்த நிலையில், நிதித் துறையின் அனுமதியுடன் ரகசியமாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அமைச்சரவை உறுப்பினர்களுக்கே தெரியாமல், முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருக்குத் தெரிந்தே இது நடந்திருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

கேரள முன்னாள் அமைச்சர் வி.சிவன்குட்டி

​இதனிடையே, நிலுவையில் உள்ள ரூ.1100 கோடி 'சமக்ர சிக்ஷா' நிதி என்பது மத்திய அரசின் கருணையல்ல, மாநிலத்தின் உரிமை என்று அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பி.எம்-ஸ்ரீ திட்டத்தில் இருந்து விலகுவதாக முந்தைய அரசு எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை என்றும், தற்காலிகமாகத் தள்ளிவைக்கவே கடிதம் அனுப்பப்பட்டிருந்தது என்றும் வி.டி.சதீசன் குறிப்பிட்டார். ​முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய முன்னாள் கல்வி அமைச்சர் வி.சிவக்குட்டி, "பி.எம்-ஸ்ரீ திட்டத்திலிருந்து எல்.டி.எஃப் அரசு ஒரு பைசாகூட வாங்கவில்லை. சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு கிடைத்த நிதிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் பேசுகிறார்" என்றார்.

கூட்டத்தில் 9-ல் 6 எம்.பி-க்கள் ஆப்சென்ட்: மம்தா கட்சி பாணியில் பிளவைச் சந்திக்கிறதா உத்தவ் சிவசேனா?

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே 2022ம் ஆண்டு ஒரு பிளவைச் சந்தித்த நிலையில், மீண்டும் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிளவைச் சந்தித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 9 மக்களவை ... மேலும் பார்க்க

அடுத்தகட்ட நடவடிக்கை... நகரும் சி.வி.சண்முகம்? சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் மு... மேலும் பார்க்க

`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "​தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணி... மேலும் பார்க்க

'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' - தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்

"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்." - ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில் பயணம் மேற்கொண்ட ஒரு இந்திய `சோலோ பெண் இன்ஃபுளூயன்ஸர்', தனது பெற்றோருக்கு நூறு முறைக்கும் மேல் சொன்ன வாக்கியம் இது. ஒவ... மேலும் பார்க்க

'இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு' ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

நேற்று தான் ஈரான், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்குள் இன்று உக்ரைன் ரஷ்யா மீது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் செய்த... மேலும் பார்க்க

`3 ஆண்டுகளுக்குப் பிறகு... சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள்!' - ஆளுநர் ஆரலேகர் பெருமிதம்

முந்தைய ஆட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக- அரசுக்கும் இடையே இருந்த அதிருப்தி சூழல்களால், 'ஆளுநர் உரை' என்றாலே தமிழ்நாடு அரசியல் களம் உன்னிப்பாக கவனிக்கும். இந்த சூழலில் இன்று மாநிலப் பொறுப்பு ஆ... மேலும் பார்க்க