செய்திகள் :

எரிபொருள் விலையேற்றம்: 'டிக்கெட் கட்டணங்களுக்கு லிமிட் இல்லை' - விமானப் பயணம் செய்பவர்கள் கவனம்!

post image

கடந்த டிசம்பர் மாதம், இண்டிகோ விமான நிறுவனம் விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், பல இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இண்டிகோ நிறுவனத்தின் இந்தப் பிரச்னையால், பயணிகள் வேறு விமான நிறுவனங்களை நோக்கி நகர்ந்தனர்.

விமானம்
விமானம்

செக் விலக்கு...

அந்தச்‌ சமயத்தில் விமான நிறுவனங்கள் டிக்கெட்டிற்கு அதிக கட்டணங்களை விதிக்கக்கூடாது என்று மத்திய அரசு செக் ஒன்றை வைத்தது.

அதன் படி, விமான நிறுவனங்கள் எகனாமிக் வகுப்பு ஒரு வழி பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ.18,000 வரை தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று எல்லை வகுத்திருந்தது.

மேலும், தேவைப்பட்டால் டிமாண்ட் அடிப்படையில் டிக்கெட் விலை உயர்த்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், நாளை முதல் இந்தக் கெடுபிடிகள் விலக்கப்பட உள்ளது.

என்ன காரணம்?

இதற்கு முக்கிய காரணம், மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் மற்றும் அதனால், ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம்.

எரிபொருள் விலையேற்றத்தை விமான நிறுவனங்கள் சமாளிக்கவே மத்திய அரசு இந்த விலக்கை அளித்துள்ளது.

ஆனால், விமான நிறுவனங்கள் டிக்கெட்டிற்கு அதிக கட்டணம் விதித்தால், மீண்டும் டிக்கெட் விலையின்‌ எல்லை நிர்ணயிக்கப்படும் என்று செக் வைத்துள்ளது மத்திய‌ அரசு.

"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது. அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான... மேலும் பார்க்க

ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே' நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன?

கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நேற்று முன்தினம் (மார்ச் 20) அமெரிக்கா 'அனுமதி' அளித்துள்ளது.அந்தந்த நாடுகள் ஈரானிய எண்ணெய் வாங்க அமெரிக்காவி... மேலும் பார்க்க