செய்திகள் :

`நீங்கள் வராவிட்டால் விற்று இருப்பார்கள்'- ஐஏஎஸ் அதிகாரி என கூறி திருமணம்செய்து பெண்ணை விற்க முயற்சி

post image

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தனது மகளுக்கு மணமகன் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் எட்டாவா நகரை சேர்ந்த பிரித்தம்குமார் என்பவர் பெண் கேட்டு வந்தார். பிரித்தம்குமார் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். தான் மாணிக்பூரில் பணியில் இருப்பதாகவும் கூறினார். அதோடு அரசு அலுவலகத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை ரஞ்சித் குமாரிடம் காட்டினார். மேலும் அரசியல்வாதிகளுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் காட்டினார். இதையடுத்து பிரித்தம் குமார் சொன்ன தகவல்கள் உண்மையானதுதானா என்பதை விசாரிக்காமலே தனது மகளை திருமணம் செய்து கொடுக்க ரஞ்சித் குமார் முடிவு செய்தார்.

அதோடு அது குறித்து விசாரித்தால் திருமணம் நின்றுவிடும் என்று அவர் அச்சம் அடைந்தார். திருமண பேச்சுவார்த்தை நடந்தபோது வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று பிரித்தம்குமார் சொன்னார்.

ஆனால் கடைசி நேரத்தில் திருமண செலவுக்கு என்று ரூ.15 லட்சம் கொடுக்கும்படி கேட்டார். இதையடுத்து முதலில் ரூ.10 லட்சமும், திருமண நிச்சயதார்த்தத்தின்போது 5 லட்சமும் ரஞ்சித் குமார் கொடுத்தார். திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. திருமணத்திற்கு மட்டும் ரஞ்சித் குமார் ரூ.15 லட்சம் செலவு செய்தார்.

திருமணத்தின் போது தன்னை வெளிநாட்டிற்கு இடமாற்றம் செய்து இருப்பதால் தனக்கு திருமணத்தில் கொடுக்கப்படும் வீட்டு சாமான்கள் அனைத்தையும் உங்களிடமே திரும்ப கொடுத்துவிடுவேன் என்றும் பிரித்தம் குமார் சொன்னார். கடந்த 11ம் தேதிதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் தங்குவதற்கு ரஞ்சித் குமார் ஹோட்டல்களில் அறை ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால் திருமணமாகி மணமகன் வீட்டிற்கு செல்லும்போது மணமகளை துன்புறுத்த ஆரம்பித்தனர்.

மணகளை விற்க முயற்சி

வீட்டிற்கு சென்றபோதும் மணமகளை தனியாக ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். இதையடுத்து அப்பெண் தனது தந்தைக்கு போன் செய்து இது குறித்து தெரிவித்தார். உடனே ரஞ்சித் குமார் தனது மகளை பார்க்க சென்றார். அங்கு சென்று பார்த்தபோது அவரது மகள் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். ரஞ்சித் குமாரை பார்த்தவுடன் பிரித்தம் குமாரும், அவரது சகோதரியும் அங்கிருந்து தப்பித்து சென்றனர். பின்னர் ரஞ்சித் குமார் தனது மகளிடம் விசாரித்தபோது, அவர்கள் தன்னை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தார். நீங்கள் சரியான நேரத்தில் வராமல் போயிருந்தால் அவர்கள் என்னை விற்பனை செய்து இருப்பார்கள் என்று கூறி அப்பெண் ரஞ்சித் குமாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ரஞ்சித் குமாரை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸார் உறுதியளித்துள்ளனர்.

பேஸ்புக்கில் மனைவி வெளியிட்ட சிமென்ட், டிரம் பதிவு; மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவன்- உ.பி அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் முஸ்கான் என்ற பெண் கடந்த ஆண்டு தனது கணவனை காதலன் துணையோடு கொலைசெய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமென்ட்டால் நிரப்பிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத... மேலும் பார்க்க

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இ... மேலும் பார்க்க

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாட... மேலும் பார்க்க

தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!

மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகி... மேலும் பார்க்க

VanDyke : கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி; மர்மம் நிறைந்த கதைகள்! இந்தியாவில் சிக்கிய அமெரிக்கர் யார்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி உட்பட இரண்டு இடங்களில் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டதாகவும், இந்தியாவில் உளவு பார்த்ததாகவும் 6 உக்ரைன் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அவர்களோடு அமெரிக்காவை சேர்ந... மேலும் பார்க்க