செய்திகள் :

'கத்தாரில் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தை?' - ட்ரம்பின் ட்வீட்டும், ஈரானின் மறுப்பும்

post image

ஈரான், அமெரிக்கா - இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலுக்குப் பிறகு, பேச்சுவார்த்தை மேசைக்கு வந்திருக்கிறது. ஆனால், அதிலும் குழப்பம் நிலவுகிறது.

நேற்று (ஜூன் 29, 2026) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சந்திப்பு நாளை தோஹாவில் நடைபெறும்" என்று பதிவிட்டிருக்கிறார். தோஹா, கத்தார் நாட்டின் தலைநகரம் ஆகும்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும், சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான காசெம் கரிபாபாதி.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

மேலும், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி, "அமெரிக்கப் பிரதிநிதிகள் கத்தாருக்குச் செல்வதற்கும், ஈரானிய தூதுக்குழு கத்தாருக்குப் பயணம் மேற்கொள்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை முழுமையாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதே ஈரானின் இப்போதைய முக்கிய முன்னுரிமை.

அது தொடர்பான கோரிக்கைகளை டெஹ்ரான் தீவிரமாகப் பின்தொடர்ந்து வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

'எங்கள் பங்கு தண்ணீரில் கை வைத்தால், கையை வெட்டுவோம்' - இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்ததையொட்டி, இந்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.இந்த நதியை நம்பிதான் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கிய மாணவர் - 1.66 கோடி கொள்முதல் தரவுகளை வெளியிட்டு அதிரடி

சிபிஎஸ்இ வாரியத்தின் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு டெண்டரில் உள்ள முரண்பாடுகளை ஆய்வு செய்து, தேசிய அளவில் கவனம் ஈர்த்த 12 ஆம் வகுப்பு மாணவர் சார்தக் சித்தாந்த், தற்போது மத்திய அரசின் கொள்முதல் தரவு... மேலும் பார்க்க

DMK Files: அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அனுமதி! - ஆளுநருக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை (ED) கோரியுள்ள அனுமதி தொடர்பான கோப்புகளை விரைந்து பரிசீ... மேலும் பார்க்க

கரையும் அதிமுக... தனித்துவிடப்பட்ட திமுக! – தமிழக அரசியல் களத்தில் மாறும் அதிகாரச் சமன்பாடுகள்!

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த ஐந்து தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மைய சக்திகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு உருவாகியுள்ள பு... மேலும் பார்க்க

"மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பேச்சை காங்., கேட்டிருந்தால் இந்நேரம்..." - விஸ்வநாதன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (ஜூன். 29) பதவி ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் கா... மேலும் பார்க்க