செய்திகள் :

குமரி: 6 வாக்காளர்களுக்காக 125 கி.மீ தூரம் பயணிக்கும் மின்னணு இயந்திரம்! ஏன் தெரியுமா?

post image

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், வாக்குப்பதிவு மையங்களில் பணியாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ​குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் அதிக மலைக்கிராமங்களை உள்ளடக்கியது பத்மநாபபுரம் தொகுதி. மலைக் கிராமங்களில் வசிக்கும் காணி சமூக மக்கள் வாக்களிக்க வசதியாக மலைக்கிராமங்களில் சிலவற்றில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவது வழக்கம். மலைக்கிராமமான அப்பர் கோதையாறு பகுதியில் நீர் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இன்ஜினீயர்கள், ஊழியர்கள் சிலர் பணிசெய்து வருகின்றனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச்சாவடி அமைத்து வாக்குப்பதிவு நடத்துவது வழக்கம். பத்மநாபபுரம் தொகுதியின் 1-வது வரிசை எண்ணைக் கொண்ட வாக்குச்சாவடி இதுதான்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

அப்பர் கோதையாறு மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்படுவது வழக்கம். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை வழியாக இந்த வாக்குச்சாவடிக்குச் சென்றால் நாகர்கோவிலில் இருந்து 50 கி.மீ. தூரத்தை கடந்தால் அங்கு சென்று விடலாம். ஆனால், கோதையாற்றில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் செல்ல முடியாது. மின்வாரிய ஊழியர்கள் செல்வதற்காக விஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது.

விஞ்ச் வழியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்வது சிரமம். அதிலும் ஒரு விஞ்சில் இருந்து மற்றொரு விஞ்சுக்கு மாறி மாறி செல்லும் நிலையும் ஏற்படும். வாக்குப்பதிவு முடிந்து மின்னணு இயந்திரங்களை விஞ்ச் வழியாக இரவில் எடுத்துவர முடியாது. எனவே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகனங்கள் செல்லும் பாதை வரை வாக்குப்பெட்டி, வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வார்கள். பின்னர் அங்கிருந்து கழுதைகளில் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.

வாக்குப்பதிவு பணியாளர்கள் நடந்து அப்பர் கோதையாறுக்கு சென்று வந்தனர். வாக்குப்பதிவுக்குச் செல்லும்போதும், வாக்குப்பதிவு முடிந்து திரும்பும்போதும் வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களும் ஏற்படுவது உண்டு. இதனால் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இருந்து குமரி மாவட்டம் வழியாகச் செல்லாமல் திருநெல்வேலி மாவட்டம் வழியாக செல்வது வழக்கம்.

வாக்குப்பதிவு

நாகர்கோவிலில் இருந்து பணகுடி, களக்காடு, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை எஸ்டேட் வழியாக வாகனத்தில் அப்பர் கோதையாறு மின் உற்பத்தி நிலையத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை ஊழியர்கள் கொண்டு செல்கின்றனர்.

​வாக்குப்பதிவு முடிந்த பிறகு இந்த வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளும், பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீஸாரும் குமரி மாவட்டத்தை வந்தடைய நள்ளிரவு ஆகிவிடும். கடந்த பல ஆண்டுகளாக 125 கி.மீ தூரம் சுற்றிச் சென்றடைகிறார்கள். அப்பர் கோதையாறு வாக்குச்சாவடியில் வெறும் 6 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். ஆறு வாக்காளர்களுக்காக 250 கிலோ மீட்டர் சுற்றி வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்படுவது ஆச்சர்யமே.!

மகளிர் இட ஒதுக்கீடு: `சமமான பிரதிநிதித்துவமா அல்லது தேர்தல் வியூகமா?' - விவாதப் பொருளாகும் திட்டம்!

பெண்களுக்கு இட ஒதுக்கீடுநாடாளுமன்றம்மத்திய அரசு ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிது. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் க... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: TMC வேட்பாளர்களுக்கு நெருக்கடி; அடுத்தடுத்து பறக்கும் சம்மன் - கடுமையாக சாடும் மம்தா

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டனர். தற்போது வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை மேற்கொள்ளும் நிலையில், திர... மேலும் பார்க்க

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள் - விமானியைத் தேடும் பணி தீவிரம்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந... மேலும் பார்க்க

'கொறடா' என்பவர் யார்? அவரது பணிகள் என்ன? அவரின் அதிகாரம் என்ன?|Vote Vibes

தமிழக சட்டமன்றக் கூட்டங்களோ அல்லது நாடாளுமன்றக் கூட்டங்களோ நடைபெறும் சமயங்களில், நாம் அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை 'கொறடா'. 'ஆளுங்கட்சி கொறடா உத்தரவு', 'கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ-க்கள்' என்று பே... மேலும் பார்க்க