செய்திகள் :

"கேரம் வீராங்கனை கீர்த்தனாவின் சாதனை; இந்த மூன்று கோரிக்கைகளை அரசு நிறைவேற்றணும்" - பா.ரஞ்சித்

post image

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது.

இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று, உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இதையடுத்து சென்னை திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரம் வீராங்கனை கீர்த்தனா, "நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனக்கு சரியான வீடு கூட இல்லை, அரசு அதையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.'' என்று அரசிற்குக் கோரிக்கை வைத்திருந்தார்.

கேரம் வீராங்கனை கீர்த்தனா
கேரம் வீராங்கனை கீர்த்தனா

இந்நிலையில் கேரம் வீராங்கனை கீர்த்தனாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித், "நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் தமிழ்நாடு முதல்வரிடம் வைக்கிறது.

உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.

இதை ஊக்கப்படுத்த வேண்டியது இச்சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. இம்மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படி நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது" என்று வேண்டுகோள் வைத்து தனது எக்ஸ் தளம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Messi Tour of India: "நிகழ்ச்சி திட்டமிடலில் AIFF ஈடுபடவில்லை" - இந்திய கால்பந்து கூட்டமைப்பு

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட கொல்கத்தா நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) இன்று (சனிக்கிழமை) கவலை தெரிவித்துள... மேலும் பார்க்க

'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Messi`GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா க... மேலும் பார்க்க

Lionel Messi: 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த மெஸ்ஸி; மூன்று நாள் பயணத்திட்டம் இதுதான்!

'GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்திருக்கிறார். விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

Vinesh Phogat: ``என்னுள் இருக்கும் நெருப்பு'' - மீண்டும் ஒலிம்பிக்குக்கு தயாராகும் வினேஷ் போகத்

மல்யுத்தத்தில் ஒலிம்பிக், காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டிப்போட்டிகள் என அனைத்திலும் வெற்றி பெற்று பதக்கங்களைக் குவித்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப்பெற்று மீண்... மேலும் பார்க்க

ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025; வெண்கலம் வென்ற இந்திய அணி!

14-வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை (21 வயதுக்கு உட்பட்டோர்) நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 இன்று வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி ... மேலும் பார்க்க

வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; தமிழ்நாட்டுக்காக அசத்தும் திருநெல்வேலி வீரர் இசக்கிமுத்து!

சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து, சௌராஷ்டிராவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார்... மேலும் பார்க்க