செய்திகள் :

சத்தீஷ்கர்: ஒரே இரவில் மாயமான இரும்பு பாலம் - 5 பேர் கைது; மூளையாக செயல்பட்ட பழைய இரும்பு வியாபாரி!

post image

இந்தியாவில் அவ்வப்போது இரும்பால் கட்டப்பட்ட பாலங்கள் காணாமல் போய்விடுகிறது. இதற்கு முன்பு பீகாரில் ஷெட்டில் நிறுத்தி இருந்த ரயிலைக்கூட ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். இப்போது சத்தீஷ்கரில் ஒரு இரும்பு பாலம் திடீரென காணாமல் போய் இருக்கிறது.

சத்தீஷ்கரில் உள்ள கோர்பா என்ற இடத்தில் கால்வாய் மீது சிறிய இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. 5 அடி அகலமும், 60 அடி நீளமும் கொண்ட அந்த இரும்பு பாலத்தை பொதுமக்கள் நடப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.

பாலம் திருட்டு போவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணி வரை மக்கள் அதனை பயன்படுத்தி இருக்கின்றனர். காலையில் அந்த பாலத்தின் வழியாக கரையின் அடுத்த பகுதிக்கு செல்ல பொதுமக்கள் வந்தபோது இரும்பு பாலம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உள்ளூர் கவுன்சிலர் லட்சுமண் என்பவரிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். லட்சுமண் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஒருவர் தனது ஆட்களுடன் வந்து கேஸ் கட்டரை பயன்படுத்தி இரும்பு பாலத்தை அடியோடு வெட்டி எடுத்து சென்று இருப்பது தெரிய வந்தது. பழைய இரும்பு வியாபாரி இரும்பு பாலத்தை வெட்டி எடுத்துச்செல்வதற்கு உதவி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் முக்கிய குற்றவாளியான இரும்பு வியாபாரி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பாலம் இருந்த இடத்தில் சில பகுதிகளை விட்டு சென்று இருந்தனர். அவசரத்தில் வெட்டி எடுத்து சென்றதால் அவற்றை விட்டு சென்று இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கு முன்பு பீகாரில் 2022ம் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் 40 ஆண்டு பழமையான 500 கிலோ இரும்பு பாலத்தை திருடர்கள் ஒரே நாள் இரவில் வெட்டி எடுத்து சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!

பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டத... மேலும் பார்க்க

சேலம்: ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கைதுசெய்யப்பட்ட முதியவர்!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவிரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்று... மேலும் பார்க்க

சென்னை: திமுக முன்னாள் எம்.பி-யின் காரை சேதபடுத்திய வழக்கு - தலைமறைவான அதிமுக நிர்வாகி!

சென்னை வேளச்சேரி செக் போஸ்ட் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி ஜெயதுரைக்குச் சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி - டெல்லியில் சோகம்

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா. சுனில் குமார் வழக்... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ - இளைஞரைத் தட்டித்தூக்கிய சைபர் க்ரைம் போலீஸ்!

சென்னை, போரூர் பகுதியில் 35 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 1... மேலும் பார்க்க

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க