செய்திகள் :

சென்னை: திமுக முன்னாள் எம்.பி-யின் காரை சேதபடுத்திய வழக்கு - தலைமறைவான அதிமுக நிர்வாகி!

post image

சென்னை வேளச்சேரி செக் போஸ்ட் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி ஜெயதுரைக்குச் சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், 13.1.2026-ம் தேதி சௌந்திரபாண்டியார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது,

``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். கடந்த 13-ம் தேதி மாலையில் மருத்துவமனைக்கு 30 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு எங்கள் மருத்துவமனையின் உரிமையாளரின் காரை உடைத்து சேதப்படுத்தினர்.

சேதப்படுத்தப்பட்ட முன்னாள் எம்.பியின் கார்

அதை தடுக்க முயன்ற ஊழியர்களிடம், `உங்க ஓனர் சங்கை அறுத்துவிடுவேன், தீ வைத்துக் கொளுத்திவிடுவேன்' எனக் கூறியதோடு அவரை அவதூறாக அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசினார்கள். தொடர்ந்து, `எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள், உங்கள் ஓனரின் தம்பி வேலுமணியின் ஆட்கள்' எனக் கூறி எனக்கும் என்னுடைய ஓனருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் வேலுமணி உள்பட 30 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக போலீஸார் சேர்த்தனர்.

அதைத் தொடர்ந்து போலீஸார், சம்பவத்தில் ஈடுபட்ட வேலுமணியின் கார் டிரைவரான சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரைக் கைதுசெய்தனர். மற்றவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.

இது குறித்து புகார் அளித்த ராஜேஸ்வரனிடம் பேசியபோது, ``சி.சி.டி.வி ஆதாரங்களுடன் புகாரளித்தும் டிரைவர் தங்க பாண்டியன் மீது மட்டும் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மற்றவர்களை போலீஸார் கைது செய்யவில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எனக்கும் என்னுடைய ஓனருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

சேதமடைந்த கார்

இது குறித்து சௌந்தரபாண்டியனார் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``புகாரளித்த ராஜேஸ்வரனின் ஓனர் ஜெயதுரை, தி.மு.கவின் முன்னாள் எம்.பியாக இருந்தவர். ஜெயதுரையின் தம்பி வேலுமணி, அ.தி.மு.கவில் தி.நகர் வடக்கு பகுதி செயலாளராக இருக்கிறார். அதோடு வடபழனியில் பிரபலமான மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். அண்ணன் தம்பிக்குள் நடந்து வந்த மோதல் இந்தளவுக்கு வெடித்திருக்கிறது. சி.சி.டி.வி ஆதாரங்கள் அடிப்படையில்தான் வேலுமணியின் டிரைவர் தங்கபாண்டியனை கைது செய்திருக்கிறோம். மற்றவர்கள முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இதுதொடர்பாக வேலுமணியிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.

குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி - டெல்லியில் சோகம்

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா. சுனில் குமார் வழக்... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ - இளைஞரைத் தட்டித்தூக்கிய சைபர் க்ரைம் போலீஸ்!

சென்னை, போரூர் பகுதியில் 35 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 1... மேலும் பார்க்க

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க