செய்திகள் :

நாமக்கல்: மலைக்கோயிலில் எளிமையாக நடந்த ஐ.பி.எஸ் அதிகாரியின் திருமணம்! - ராஜஸ்தானை சேர்ந்தவர்!

post image

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்த் மீனா. இவர், கடந்த 2022-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். தற்போது சேலம் புறநகர் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேலம் ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றும் அனுபிரியா மீனாவுக்கும் திருமணம் செய்ய இரண்டு குடும்பத்தினரும் பேசி முடிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் எளிமையாக இன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் உள்ள மலைக்கோயிலில் நடந்தது. இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்திலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திருமணம்
திருமணம்

எளிமையாக திருமணம் நடந்தது குறித்து இளம் ஐ.பி.எஸ் அதிகாரி சுபாஷ் சந்த் மீனாவின் நெருங்கிய வட்டாரத்தில் பேசினோம். ``ஐஐடியில் படித்த சுபாஷ் சந்த் மீனா,தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான பிறகும் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாகவே வாழ்ந்து வந்தார். அதனால்தான் தன்னுடைய திருமணத்தையும் மலைக்கோயிலில் வைத்து நடத்தியிருக்கிறார். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆடம்பரமாக திருமணம் செய்து கொள்ளும் இந்தக் காலக்கட்டத்தில் சுபாஷ் சந்த் மீனா, எந்தவித பப்ளிசிட்டி இல்லாமல் திருமணத்தை நடத்தியிருக்கிறது" என்றனர்.

காதலனை கொன்று சிறை சென்ற பெண்ணுக்கு ஆயுள் கைதியுடன் மலர்ந்த காதல்! - திருமணம் செய்ய 15 நாள் பரோல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மாடலாக இருந்த நேகா(34) என்ற பெண்ணுக்கு டேட்டிங் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவருடன் 2018ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது. நேகாவிற்கு ஏற்கனவே திக்‌ஷந்த் கம்ரா என்ற காதலன் இருந்தார். ... மேலும் பார்க்க

மும்பை: உத்தவ் கட்சி கவுன்சிலர் மேயராவதை தடுத்த பாஜக... மகாராஷ்டிராவில் 15 மாநகரில் பெண் மேயர்கள்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் எந்த மாநகராட்சிக்கு பெண் மேயர், எந்த மாநகராட்சிக்கு பொது பிரிவை சேர்ந்தவர் மேயர்... மேலும் பார்க்க

உணர்வுப்பூர்வ சந்திப்பு: மும்பையில் வழித் தவறிய தாய் - 12 ஆண்டுகளுக்குப்பின் சேர்ந்து வைத்த போலீஸ்

மும்பையில் ஏராளமானோர் யாசகம் பெற்று வாழ்கின்றனர். அவர்களில் பலர் தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்தவர்களாகவோ அல்லது உறவுகள் அற்றவர்களாகவோ இருக்கின்றனர். அவ்வாறு மும்பையில் யாசகம் பெறுபவர்களை மீட்டு போ... மேலும் பார்க்க

`3 பங்களா, 3 ஆட்டோ, கார், கந்துவட்டி' - இந்தூரில் யாசகம் எடுத்து ராஜவாழ்க்கை வாழ்ந்த மாற்றுத்திறனாளி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் யாசகம் எடுத்து வாழ்ப்வர்களுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து நகர் முழுவதும் யாசகம் எடுப்பவர்களை பிடித்து சென்று முகாம்களில் அடைத்தது. அங்க... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதானவர்களை வேட்பாளர்களாக்கிய அஜித்பவார்; சிறையிலிருந்தே வென்ற பெண்கள்; பின்னணி என்ன?

புனே மாநகராட்சித் தேர்தலில் கேங்க்ஸ்டர் பாண்டு ஆண்டேகரின் உறவுக்கார மகளிர் சிறையில் இருந்து கொண்டே போட்டியிட்டனர்.பாண்டு ஆண்டேகரின் மருமகள் சோனாலி மற்றும் மைத்துனி லட்சுமி ஆகியோர் கொலை வழக்கில் சிறையி... மேலும் பார்க்க